தமிழ் சினிமாவில் சென்சேஷன்ல்  ஹீரோவாக இருந்தவர் மாதவன். maddy என செல்லமாக அழைக்கப்பட்ட மாதவன் , அலைபாயுதே, மின்னலே, ரன் , டும் டும் டும் என அனைத்து படங்களிலும் காதல் ரசங்களை தெறிக்கவிட்டார். குறிப்பாக மாதவனின் சிரிப்பிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தனர். இன்றளவும் இருக்கின்றனர். மாதவன் நடிக்க வருவதற்கு முன்னதாக கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். தனது மாணவியான சரிதாவையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். மாதவன் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும் , பிறந்து வளர்ந்தது எல்லாமே பிகார்தான். மாதவன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த சமயத்தில் நேர்காணல் ஒன்றில் தனது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்திருக்கிறார்.


 






மாதவன் கூறியதாவது: ”நான் ஒரு சோம்பேறி..என்னை தனியா விட்டா நான் தூங்கிடுவேன்.. ரொம்ப டயர்டான ஒரு தயிர்சாதம் சாப்பிடுற ஒரு ஆளு. எனக்கு பிடித்த உணவு தயிர் சாதம்தான்.நான் ரொம்ப எளிமையான மனிதன். ரொம்ப பெரிய ஆசைகள் எல்லாம் இல்லை.நான் பிகார்ல ஜம்ஷத்பூர்லதான் பிறந்தேன். எனக்கு தமிழ் அவ்வளவா தெரியாது! ஹிந்திதான் தெரியும். எங்க அப்பா அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்த அறிவுரை இதுதான். முதல்ல யாரையும் தெரிஞ்சே காயப்படுத்தக்கூடாது. மற்றொன்று உங்களுக்கு சொந்தமான காசை யாருக்கும் கொடுக்கவும் கூடாது, அவங்களுடையதை வாங்கவும் கூடாது.திருமணத்திற்கு பிறகும் எனக்கு பெண் ரசிகர்கள் இருக்க காரணம் . அவங்க மாதவனை ரசிக்கவில்லை. படத்தில் வரும் கேரக்டரைத்தான் ரசிக்குறாங்க. “ என தெரிவித்துள்ளார் மாதவன் .