சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர் நவீன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமான இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பாவம் கணேசா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.




இந்த நிலையில், விஜய் “டெலி அவார்ட்ஸ்” நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நவீனின் மனைவி கிருஷ்ணகுமாரி பேசியதை ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். அதில், அவர் பேசியிருப்பதாவது, “ எல்லாரும் உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது. நீங்க பிரிஞ்சிடுவீங்கன்னு சொல்லிருக்காங்க. சாபம் விட்ட எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். இப்போவும் சொல்றேன். என்னை தாண்டிதான் எந்த கஷ்டத்தையும் அவரை நெருங்க விடுவேன்” என கண்ணீர் மல்க கூறுகிறார்.


அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கவின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. நவீன் கிருஷ்ணகுமாரியை திருமணம் செய்வதற்கு முன்பு பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிட்டது. அதாவது, கிருஷ்ணகுமாரியை திருமணம் செய்வதற்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாகவும், அதை மறைத்தே கிருஷ்ணகுமாரியை திருமணம் செய்து கொள்ள முயற்சித்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போலீசார் நவீனை கைது செய்தனர்.


பின்னர், ஜாமீனில் வெளியே வந்த நவீன் கிருஷ்ணகுமாரியுடன் படங்களை பதிவேற்றினார். அவர்களுக்கு திருமணம் நடந்ததும் புகைப்படம் மூலமே தெரியவந்தது. இந்த ப்ரோமோவில் பேசிய கிருஷ்ணகுமாரியின் தனது கையை வயிற்றில் வைத்துள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பது போன்று தோன்றுகிறது. மேலும், நவீனும் தனது நெஞ்சில் கிருஷ்ணகுமாரியின் முகத்தை பச்சை குத்தியுள்ளார். இதை அவரே காட்டுகிறார்.


நவீனின் ரசிகர்கள் பலரும் கிருஷ்ணகுமாரிக்கும், நவீனுக்கும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண