நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். படம் மாபெரும் வெற்றி பெற்றதயைடுத்து, கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கே.ஜி.எப். இரண்டாம் பாகம் நேற்று வெளியான நிலையில், அந்த படத்திற்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.




தமிழ்நாட்டிலும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை காட்டிலும் கே.ஜி.எப். 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையிலும் கே.ஜி.எப். 2ம் பாகம் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள கே.ஜி.எப். 2ம் பாகம் படம் ஓடிய அனைத்து திரையரங்கிலும் டிக்கெட்டுகள் இன்று விற்பனையாகி ஹவுஸ் புல் ஆகியுள்ளது. இதனால், பீஸ்டை காட்டிலும் கே.ஜி.எப். 2ம் படத்திற்கான எதிர்பார்ப்பும், வசூலும் எகிறியுள்ளது.






மேலும், முதன்முறையாக மூன்றாவது நாளாக அதிகாலை ஷோவான 3 மணிக்கு கே.ஜி.எப். 2ம் பாகத்திற்கு நாளை டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. இதற்கு முன்பு வேறு எந்த படத்திற்கு மூன்றாவது நாள் அதிகாலை காட்சி ஓட்டப்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிகளவில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரையிலும் சிறப்பு காட்சிகள் கே.ஜி.எப். 2ம் பாகம் படத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 






சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று அடுத்த இரு நாட்களிலும் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் ஓடிய திரையரங்குகளில் கே.ஜி.எப். 2ம் பாகம் இனி வரும் நாட்களில் திரையிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண