ரஜினிகாந்த் "அண்ணாத்த" தயாரிப்பாளர்களுடன் மீண்டும் இணைவதற்கு ஒப்புக்கொண்டார். எனவே, இருவரும் மீண்டும் நான்காவது முறையாக அணிசேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இயக்குநர் இறுதி செய்யப்பட்டவுடன் அதிகாரப்பூர்வ  அறிவிப்புவரக்கூடும். என்ற செய்தி நேற்று இணையத்தில் வைரலானது. ரஜினிகாந்தின் அடுத்த படம் அவரது 169-வது படம் . 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் தங்கள் கதைகளை ரஜினிகாந்திடம் விவரித்ததாக கூறப்படுகிறது, ஆனால் ரஜினிகாந்த்  இன்னும் 'தலைவர் 169' படத்திற்கான இயக்குநரை  தேர்வு செய்யவில்லை. ரஜினிகாந்த் இந்த இருவரிடமிருந்து ஒன்றை தேர்வு செய்கிறாரா அல்லது அவரது அடுத்த படத்தை இயக்க வேறு யாரையாவது தேர்வு செய்கிறாரா என்ற விவாதம் நேற்றில்  இருந்து இணையத்தில் வைரலாக தொடங்கியது .




இந்நிலையில், ”கண்ணம் கண்ணும் கொல்லையடித்தால்” படத்தைப் பார்த்தபிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங் பெரியசாமியை பாராட்டியிருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே . இயக்குநருக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே  தொலைபேசி உரையாடல் இணையத்தில் கசிந்து, சூப்பர் ஸ்டார் இயக்குநரிடம் ஸ்கிரிப்ட் இருக்கிறதா என்று கேட்ட ஒரு வார்த்தையையும் வைத்து பலரும் , சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை தேசிங் பெரியசாமி தான் இயக்குகிறார்  என்று ட்வீட் செய்ய ஆரம்பித்தனர் .






இதனை சரிசெய்யும் வகையில் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்  "எனது அடுத்த படம் பற்றி பரவிவரும் செய்தி உண்மையல்ல. விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை அறிவிப்பேன். உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று ட்வீட் செய்து இந்தப் புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் .