தனது ரசிகரின் கனவை நிறைவேற்றிய கமலின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாவதால் படத்தின் ப்ரோமோஷனுக்காக மலேசியா, துபாய், ஹைதராபாத் என பறந்து கொண்டிருக்கிறார் கமல். இதற்கிடையில் அவரது நீண்ட கால ரசிகர்களையும் சந்தித்து வருகிறார். ரசிகர்களை கமலை பற்றி பேசவைத்து, அவர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் கமலை அவர்கள் முன் தோன்ற வைப்பதுதான் கான்செப்ட்.
அந்த வகையில் கமலின் தீவிர ரசிகர் ஒருவர், கமலை போலவே பேசி கொண்டு நிற்க திடீரென்று கமல் அவர் தோன்றுகிறார். கமலை பார்த்ததும் அழுத அந்த ரசிகர், தான் உங்களை போலவே தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், தான் செய்வது மிமிக்ரி இல்லையென்றும் சொல்கிறார். தொடர்ந்து கமலுக்கு மௌத் ஆர்கன் ஒன்றையும் பரிசளித்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது.
டிரெய்லர் வெளியானபோதே, படத்தில் சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் கணித்தனர். 'விக்ரம்' படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், அவர் க்ளைமாக்ஸில் ஒரு கேமியோ வேடத்தில் காணப்படுவார் என்றும் செய்திகள் பரவின. கேமியோ ரோலில் சூர்யா அந்த செய்தியை நிஜமாக்குவதுபோல, அந்த நிகழ்ச்சிலேயே படத்தின் இயக்குநர் லோகேஷ் சூர்யா நடித்திருப்பதை உறுதி செய்தார். இந்த நிலையில், விக்ரம் படத்தின் மூன்றாம் உருவாக இருப்பதாகவும், அதற்கான காரணமாக சூர்யா இருப்பார் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்