தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடியான காஜல் அகர்வால் தையடுத்து, காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு, தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் அவருக்கு குழந்தை பிறந்தது. கெளதம்- காஜல் அகர்வால் தனது மகனுக்கு நீல் கிச்சலு என்று பெயரிட்டனர்.


அன்னையர் தினம் கொண்டாடப்பட்டுவரும் இன்று, காஜல் அகர்வால் தன் மகனை நெஞ்சோடு அனைத்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.






நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில்,


”அன்பே நீல், நீ எனக்கு எவ்வளவு முக்கியம், நீ என் வாழ்வின் வசந்தம் என்பதை அறிய வேண்டும் என விரும்புகிறேன். என் வாழ்வில் முதன்முதலாக உன்னை என் தோளில் சாய்தபோதும்,உன் சின்னஞ்சிறு கைகளை என் கைகளுக்குள் ஏந்தியபோதும், உன் அழகிய கண்கள், உன் சுவாசக் காற்றை உணர்கையில், நான் எப்போதும் காதலின் கதகதப்பில் இருக்கப்போகிறேன் என்பதை உணர்ந்தேன். நி என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் எல்லாமும் நீ. உனக்கு சிறந்த முறையில் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுக்க முயற்சிப்பேன்.ஆனால். உன் வருகையில் மூலம் எனக்கு எல்லையில்லாவற்றை  சொல்லிக்கொடுத்துவிட்டாய் நீ. தாய்மையின் உணர்வை நீதான் எனக்கு உணர்த்தினாய். எதையும் எதிர்பார்க்காத அன்பு என்பதை நீதான் கற்றுத்தந்தாய். என் உடலின் வெளியே என் இதயம் இருக்கும் என்பதையும் நீதான் என உணர்த்தினாய்.


தாய்மை சற்று பயமனா பயணம்தான். ஆனால், அழகானது. நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. நீ எப்போதும் மகிழ்ச்சியுடன் வளர வேண்டும். இந்த உலகம் உன்னால் எதுவும் முடியாது என்று சொல்லும் வார்த்தை உன்னை பாதிக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்.






நீ ஒன்றை எப்போதும் மறந்துவிடாதே! நீ எனக்கு, ’You are my sun, my moon, and all my stars, little one. ’”


என்று குறிப்பிட்டு அன்னையர் தின வாழ்த்துகளை கூறியுள்ளார்.






இதோடு, காஜல் அகர்வால், தன் அன்னைக்கு கவிதை ஒன்றை எழுதி தன் பக்கத்தில் பகிந்துள்ளார்.


”அன்பு அம்மா, இதுவரை நீ எனக்கு செய்த எல்லாவற்றிற்கும் நான் நன்றி கூறியிருக்கிறேன்.


ஆனால், நான் இப்போது முன்பிருந்த பெண் அல்ல. நான் மாறிவிட்டேன். நான் புதிய உலகில் காலடி எடுத்துவைத்திருப்பதாக உணர்கிறேன்.. இந்த பயணம் வித்தியாசமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த அனைத்தும் இங்கு வேறொன்றாக இருக்கிறது. எல்லாவற்றையும் நான் புதிதாக கற்றுக்கொள்கிறேன்…”


தாய்மையின் மகத்துவத்தையும் அவர்களின் பங்களிப்பினையும் பெரிதாக மதிக்கிறேன். ஒரு தாயாக பெருமை கொள்கிறேன். என்றும் குறிபிட்டுள்ளார்.