தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா திரைப்படம் மூலம் இசையை அலங்கரிக்க வந்த ரஹ்மான் அவர்களுக்கு , முதல் படமே அதற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களில் பலருக்கும் இன்றளவும் ஃபேவரைட்டானது, மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே , இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார்.ஷாலிகி ஹீரோயினாக நடித்திருந்தார்.சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த படம் தற்போதும் ரசிகர்களின் விருப்ப தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படத்தை இந்தியில் Saathiyaa என்ற பெயரில் வெளியானது.  Saathiyaa  என்பது சிறந்த துணை என பொருள். இந்த படத்தில் கதாநாயகனாக விவேக் ஓபராயும் , கதாநாயகியாக ராணி முக்கர்ஜியும் நடித்திருந்தனர். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற indian pavilion expo 2021 கலந்துக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், விவேக் ஓபராய் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.







புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் .  indian pavilion expo 2021 தொடக்கவிழாவில் , இரண்டு சாதியாஸூம் பக்கத்தில் என கேப்ஷன் கொடுத்து, மாதவனையும் விவேக் ஓபராயையும் டேக் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த நடிகர் மாதவன் “ உங்களை சந்தித்து 
 ஒன்றரை வருடங்களாகிவிட்டது. கொரோனா தொடங்குவதற்கு முன்னதாக நாம் சந்தித்தது. உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியான நாட்கள்.என குறிப்பிட்டுள்ளார்.







சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டாத ஏர்.ஆர்.ரஹ்மான் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் ஷூம் மீட்டிங்கின் பொழுது, அதிலுள்ள  Ai வசதி மூலம் புகைப்படம் எடுத்து, மீசை இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்போது ரசிகர்கள் முறுக்கு மீசை வேண்டும் என கோரிக்கைகள்  வைத்திருந்தனர். அந்த புகைப்படமும் இணையத்தை கலக்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில், விக்ரம் நடிக்கும்  கோப்ரா, மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன், சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகும் பத்து தல ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.