Just In





JR 30: ஜெயம் ரவி-ப்ரியங்கா மோகன் இணையும் புதிய படம்... பூஜையோடு தொடக்கம்!
JR 30 Upcoming film: இயக்குனர் ராஜேஷ் - ஜெயம் ரவி இணையும் 'ஜேஆர் 30' படத்தின் பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது. அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைகிறார்.

JR 30 - ஜெயம் ரவி - இயக்குனர் ராஜேஷ் இணையும் "JR 30" படம் பூஜையோடு தொடங்கியது
தமிழ் சினிமாவின் மிகவும் ரசிக்க கூடிய மேன்லி ஹீரோ என்றால் அது ஜெயம் ரவி. அவர் தேர்வு செய்யும் ஒவ்வொரு படமும் அவரது ரசிகர்களை மேலும் ஈர்க்கிறது. தென்னிந்திய சினிமா ரசிகர்களால் போற்றப்படும் ஜெயர் ரவி, தனது 30 வது படத்தின் மூலம் இயக்குனர் ராஜேஷ் உடன் இணைகிறார்.
இன்று பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் :
ஆடி 18 என்பது தமிழ் மக்களால் பெரியதும் கொண்டாடப்படுகிறது. அந்த சிறப்பு நாளில் பெரும்பாலான இயக்குனர்கள் தங்களின் புது படத்திற்கான வேலைகளை துவங்குவர். அதே போல இயக்குனர் ராஜேஷ் - ஜெயம் ரவி இணையும் 'ஜேஆர் 30' படத்தின் பூஜையுடன் இன்று படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். பல நட்சத்திரங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான பிரியங்கா மோகன்இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்களுடன் நாட்டி மற்றும் VTV கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் - ஜெயம் ரவி மீண்டும் கூட்டணி:
ஜெயம் ரவியின் இந்த 30வது திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ஜெயம் ரவி - ஹாரிஸ் ஜெயராஜ் ஜோடியில் உருவாகும் 4வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தாம் தூம், எங்கேயும் காதல், வனமகன் உள்ளிட்ட படங்கள் இவர்கள் கூட்டணியில் உருவாகி பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி இன்றும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக உள்ளன. இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட 'ஜேஆர் 30' படத்தின் படப்பிடிப்பு அடுத்து வாரம் கேரளாவில் தொடங்க உள்ளது. தென்னகத்தின் மற்ற பகுதிகளிலும்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி :
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் "பொன்னியின் செல்வன்" எனும் காவிய திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைதுறையினரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் இப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிப்பதால் அதில் கவனம் சிதற கூடாது என்பதற்காக அவரின் மற்ற வேலைகளை குறைத்து கொண்டுள்ளார்.