ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு நடிகை சோனியா அகர்வால் பதிலளித்துள்ளார். 


செல்வராகவனின் ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலேயே இளைஞர்களின் ஏஞ்சலாக மாறிய அவர் சிலம்பரசனின்  ‘ கோயில்’ அடுத்தாக செல்வாவுடன்  ‘ 7ஜி ரெயின்போ காலனி’  ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே இயக்குநர் செல்வராகவனை காதலித்த சோனியா அவரையே கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 


ஆனால அவர்களிடையே இடையே கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சோனியா தனது புகைப்படங்கள் மற்றும் தனது செயல்பாடுகள் குறித்து பதிவுகளை அடிக்கடி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் அண்மையில் தான் மெஹந்தி வைத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.


 






இதைப்பார்த்த ரசிகர் ஒருவர் ‘நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சோனியா,  ஹாஹா ஹா ஏன்... உன்னால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன?.. என்னுடைய திருமணத்திற்கான மெஹந்தி இவ்வளவு சின்னதாக இருக்க  வாய்ப்பில்லை.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 




முன்னாள் மனைவியான சோனியா அகர்வாலை விவாகரத்து செய்து கொண்ட செல்வராகவன் தன்னிடம் துணை இயக்குநராக வேலை செய்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.






இவருக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.