தீபக் டிக்டாக்கில் பிரபலமான முகம். டிக்டாக் மூலமாகத்தான் அவர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் தான் இவருடைய முதல் சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’விலும் இவர் நடிக்கிறார். இவரும் செய்தி வாசிப்பாளரான அபிநவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். சன்டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் நடித்தார். இரு கதாப்பாத்திரங்களிலும் தனது நடிப்பு திறமையாக பலரது கவனத்தை ஈர்த்த அபி நவ்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம்பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.






இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு சோஷியல் மீடியா மூலம், தாங்கள் காதலிப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்தனர். இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தார்கள். பின் இருவீட்டாரும் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, இரு வீட்டார் முன்னிலையிலும் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அந்த புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலானது. அதைத் தொடர்ந்து’ கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி , சென்னையில் உள்ள மண்டபத்தில் தீபக்-அபிநவ்யாவுக்கு திருமணம் முடிந்தது. இவர்களது திருமணம் முடிந்ததில் இருந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.






இருவரும் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தீபக்-அபிநவ்யா ஜோடிக்கு திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில்’ நடிகை அபிநவ்யா’ தனது கணவருக்கு இன்ஸ்டா மூலம் ஹேப்பி முதல் மாத அனிவர்ஸரி புட்டா என வாழ்த்தியுள்ளார். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரது போஸ்டை லைக் செய்துள்ளனர். மேலும் பல்வேறு ரசிகர்களும் சூப்பர் ஜோடி, கீயூட் கபுள் என இருவரையும் வாழ்த்தி வருகின்றனர்.