Vanitha Vijaykumar:  மறைந்த பீட்டர்பாலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமே இல்லை எனும்போது அவரது மறைவுச் செய்தியில் எனது பெயரை சேர்த்து வெளியிடுகிறீர்கள் என வனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,


”மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, 2020 இல் நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம், அது அதே ஆண்டு முடிந்தது. நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன், கணவர் இல்லை, எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை.  நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள். 


மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதையோ அல்லது கிசுகிசுப்பதையோ நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொள்ளுங்கள்.  ஒவ்வொருவருக்கும் வாழவும், எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யவும் உரிமை உண்டு” இவ்வாறு அவர் தனது விளக்கத்திக் குறிப்பிட்டுள்ளார். 


நடிகை வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து சில மாத காலத்திலே பிரிந்தார்.  கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததார். 


ஏற்கனவே திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்ற வனிதா விஜயகுமார் தனக்கு ஒரு துணை வேண்டும் என பீட்டர்பால் என்பவரை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் தனது மனைவி எலிசபெத்தை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. சோசியல் மீடியாவில் இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி ஏராளமான ட்ரோல்கள் செய்யப்பட்டன.


பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு  மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல மோதல்களுக்கு பின்னர் நடைபெற்ற இவர்களின் திருமண வாழ்கை அதிக நாள் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. கைவிட்டு இருந்த குடி போதை பழக்கத்தை மீண்டும்  தொடங்கிய பீட்டர் பால் ஏகப்பட்ட அளப்பறைகள் செய்ய வனிதா - பீட்டர் பால் பிரிந்தனர். வனிதா பீட்டர் பாலை விரட்டியடித்ததாகவும் சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகின. 


குடி போதைக்கு அடிமையான பீட்டர் பாலுக்கு அல்சர், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த பீட்டர் பால் உடல் நிலை கடந்த ஒரு வார காலமாக மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரு சிலர் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறி வருகினறனர். இருப்பினும் அவரின் இறப்பு செய்தி குறித்து எந்த ஒரு தகவலையும் நடிகை வனிதா விஜயகுமார் தனது சோசியல் மீடியா பக்கங்கள் மூலம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரிய கேள்வி குறியாக இணையத்தில் வைரலாகி வந்தது. 


இந்நிலையில் வனிதா பீட்டர்ல் பால் எனது கணவர் இல்லை. அவரது மறைவுச் செய்தியில் தனது பெயரை சேர்க்கவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.