கேபி என்று செல்லமாக அழைக்கப்படும் கேப்ரில்லா சார்ல்டன் தன் சிறு வயதிலேயே விஜய் தொலைக்காட்சியின் `ஜோடி ஜூனியர்’ என்ற குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர். தொடர்ந்து அவர் `ஏழாம் வகுப்பு சி பிரிவு’ என்ற பள்ளிக் குழந்தைகள் பற்றிய தொடரிலும் நடித்தார். விஜய் தொலைக்காட்சியின் `ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் பங்கேற்ற கேப்ரியல்லா, அதில் வெற்றியாளராகவும் மகுடம் சூட்டினார். தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் கேப்ரில்லா அவ்வபோது திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தலைக்காட்டியுள்ளார்.






 


தனுஷ் நடித்து, ஐஷ்வர்யா தனுஷ் இயக்கிய `3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் கேப்ரில்லா. தொடர்ந்து அவர் சரத்குமார் நடித்த `சென்னையில் ஒரு நாள்’ படத்திலும், சமுத்திரகனி இயக்கி, நடித்த `அப்பா’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். விஜய் டிவியின் கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசனுக்கு பிறகு  சேபல் தயாரிக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான , பிக்பாஸ் ஜோடிகள் , சிங்கிள் பசங்க உள்ளிட்ட ஷோக்களில் கலக்கி வந்த கேப்ரில்லா. தற்போது ஈரமான ரோஜாவே சீரியலின் அடுத்த பாகத்தில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கேபி  சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ” சினிமாவில் எதிர்காலம் உங்களுக்கு பிரகாசமாக இருக்கும் நிலையில் ஏன் சீரியல் போன்ற சின்ன விஷயத்தில் நடிக்கிறீர்கள் ?’ என் கேட்க, அதற்கு பதிலளித்த கேபி , “எல்லா மீடியமும் ஒன்றுதான்..நடிகர்கள் தங்கள் பங்களிப்பை கொடுக்கத்தானே வேண்டும். தினமும் ஒருவரின் வீடு தேடி செல்வது அவ்வளவு எளிதான காரியமில்லை“ என புரியும் படி பொதுவாக விளக்கம் அளித்துள்ளார்.


இதனை தொடர்ந்து மற்றொரு ரசிகரும் அதே மாதிரியான கேள்வி கேட்க , இதனால் கடுப்பான கேப்ரில்லா “ உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா? இல்ல உங்க வேலையை பற்றி நான் கமெண்ட் பண்ணேனா? வாழ விடுங்க” என கொந்தளித்துள்ளார். முதன் முதலாக ஒரு வேலையை தன்னமிக்கையுடன் தொடங்கும் பொழுது, இப்படியான கேள்விகள் சற்று நெகட்டிவ் வைபை ஏற்படுத்துவதாகத்தானே இருக்கும்.


.