90களில் மதிமயக்கும் பல பாடல்களில் நடித்து நெஞ்சங்களில் நிறைந்தவர் மோகினி. துள்ளல் பாடல்களில் துவங்கி திரில்லர் பாடல்கள் வரை அவரது பிளே லிஸ்ட் பெரிது. அவற்றில் டாப் 5 உங்கள் பார்வைக்கு. 

1.கலகலக்கும் மணியோசை...

‛‛திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்அதில் கன்னம் இட கன்னம் மெல்ல கெஞ்சும்பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும்இதழினிலே ஒரு கவிதை தாஅருகினிலே வந்தாலும் அழகினையே தந்தாலும்இனிமையிலே ஒரு மனதை தா...

இனி ஒரு பிரிவேது ஓதடைகளும் இனி எதுகலகலக்கும் மணியோசைசலசலக்கும் குயிலோசைமனதினில் பல கனவுகள் மலரும்’’

இளையராஜா இசையில் ஈரமான ரோஜாவின் அனைத்து பாடல்களும் தித்திக்கும்... அதிலும் இந்த பாடல்... ஐஸ்கிரீம்!

2.வனமெல்லாம் செண்பகப்பூ...

‛‛ஆத்தோரம் பூங்கரும்புகாத்திருக்கும் சிறு எறும்புஅக்கறையில் ஆயிரம் பூ பூ பூபூத்திருக்கு தாமரைப்பூபொன்னிறத்து காஞ்சறம்பூபுத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்புஎப்போதும் மாராப்புஎடுப்பான பூந்தோப்புஎன்ன என்னஎங்கும் தித்திப்பூபூஒட்டாத ஊதாப்பூஉதிராத வீராப்பூ வண்ணவண்ண இன்பம் ரெட்டிப்பூபூவழி முழுதும் வனப்புஎனக்கழைப்புபுது தொகுப்பு வகுப்புகணக்கெடுப்பு...’’நாடோடி பாட்டுக்காரன் படத்தில் இசைஞானியின் இசையில் தேனில் மூழ்கிய இன்பம் தரும் பாடல்!

3.ஓஹோ ... காலை குயில்களே...

‛‛ஓஹோ ஹோ காலைக்குயில்களே கவிதை பாடுதேகண்ணில் காணும் யாவும்நெஞ்சில் இன்பமாகும்பனித்துளியில்மலர்க்கொடிகள்குளிக்கிற பொழுதல்லவாபசுங்கிளிகள்சிறகடித்ததேபறக்கிற பொழுதல்லவாஓஹோ ஹோ காலைக்குயில்களேகவிதை பாடுதே....’’

உன்னை வாழ்த்தி பாடுகிறேன் படத்தில் இசைஞானியின் இசையில் மலை மேகங்களுக்கு இடையே ரம்யமான பாடல்!

4.ஏலேலங் கிளியே... எனை தாலாட்டும்...!

‛‛சோலைக் குயில் தேடி என்னைப் பார்க்க வந்துவிடும்ஒரு பாடல் கேட்டு வரும்ஆடி வெள்ளம் தேடி வந்து ராகம் சொல்லித் தரும்எந்தன் ராகம் தீர்த்து விடும்நானா பாடுற பாட்டுஅந்த தென்றலும் அதைக் கேட்டுவசந்தம் இன்று பூவில் வரும்நாளை எந்தன் வாசல் வரும்வசந்தம் இன்று பூவில் வரும்நாளை எந்தன் வாசல் வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையேஉன்னைப் பாடாத நாள் இல்லையேஅடிக் கண்ணம்மா பாடாத நாள் இல்லையே...’’

சிற்பியின் இசையில் நான்பேச நினைப்பதெல்லாம் திரைப்படத்தில் பலரின் பேவரிட். எப்போதும் கேட்கலாம். 

5.நான் பாடும் ராகம்...

ஜமீன் கோட்டை படத்தில் சிற்பி இசையில் திகிலூட்டும் காட்சியிலும் ரசிக்கும் படியான இசையில் அமைந்த பாடல். படத்தோடும் சரி, தனியாகவும் சரி, எப்படி கேட்டாலும் இனிமை தரும் ரகம் தான், ‛நான் பாடும் ராகம்... ’ பாடல். வெண்கல குரல் சுவர்ணலதா பாடிய இந்த பாடல் எப்போது கேட்கலாம்.

 

இது போன்ற இன்னும் பல பாடல்களை மோகினி தந்துள்ளார். என்றும் நெஞ்சில் நிற்கும் அந்த பாடல்களைப் போல அவரும் பல்லாண்டு வாழ அவரது 45 வது பிறந்தநாளில் வாழ்த்துவோம்!

 

மேலும் படிக்க:

90's கிட்ஸ்களின் கனவுவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!

ஈரமான ரோஜாவே மோகினியின் 90களை திரும்பி பார்க்கும் ஆல்பம்!