சீரியல்களில் துணை வேடங்களில் நடித்து வரும் அன்பரசி பெரியார் பிறந்தநாளன்று சுயமரியாதை திருமணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பகுத்தறிவு பகலவன் என கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பொதுமக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 


இப்படியான நிலையில் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் பலரும் அவரது பிறந்தநாளன்று சுயமரியாதை திருமணம் செய்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. அந்த வகையில் சீரியல்களில் துணை வேடங்களில் நடித்து வரும் அன்பரசியும் திருமணம் செய்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 


 






இவர் சன் டிவியில் பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் தோழியாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகவிருக்கும் நள தமயந்தி சீரியலும் மிக முக்கிய வேடத்தில் அன்பரசி நடித்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி முன்னிலையில் அன்பரசிக்கும், வசந்தனுக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. அவருக்கு ஏராளமானோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் தனது பதிவில், “வசந்தனை இன்று முதல் எனது வாழ்விணையராக ஏற்றுக்கொள்கிறேன். வாழ்வில் ஏற்படும் இன்ப - துன்பங்களில் சம பங்கேற்கும், சம உரிமை படைத்த உற்ற நண்பர்களாக வாழ்வோம் என்று உறுதி கூறுகிறேன்” என உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.




மேலும் படிக்க: Cool Suresh: மேடையில் தொகுப்பாளினியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்.. மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..!