பாலிவுட்டிலும் மாஸ் காட்டும் துல்கர் சல்மான்!


தமிழிலும், மலையாளத்திலும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்த சார்மிங் பாய் துல்கர் சல்மான். தமிழில் வாயை மூடி பேசவும் படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமானதிலிருந்து, நம்ப ஊர் பெண்களின் கான்ஸ்டன்ட் க்ரஷ் ஆகி விட்டார் துல்கர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான இவர், தந்தையைப் போலவே மாலிவுட், கோலிவுட், பாலிவுட், டோலிவுட், என அனைத்து மொழி படங்களிலும் ஆல்-ரவுண்டிங் செய்து கலக்கி வருகிறார். சாக்லேட் பாயாக-ஆர்மி மேனாக, இவர் நடித்து சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம், விமர்சனத்திலும் வசூலிலும் சக்கை போடு போட்டது. ‘லைட் ஸ்டோரி லைன்’ உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து ‘ஃபீல் குட்’ படங்களாக நடித்து வந்த துல்கர், இப்போது பல பரிமானங்களிலும் உள்ள திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ச்சுப்.. ரிவன்ஞ் ஆஃப் ஏன் ஆர்டிஸ்ட்:


தற்போது துல்கரின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ச்சுப் ரிவன்ஞ் ஆஃப் ஏன் ஆர்டிஸ்ட்’ திரைப்படம் சைக்கலாஜிக்கல்-மிஸ்ட்ரி திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து ரசிகர்களும் ரலீஸ் டேட்டிற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் திரை தாகத்தை தணிக்கும் வகையில் படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 






செப்டம்பர் 23 ரலீஸ்!


படத்தில் பாலிவுட் நடிகர் சன்னி டியோல், துல்கல் சல்மான், ஸ்ரேயா தன்வந்திரி, பூஜா பட் ஆகியோர் மெயின் ரோலில் நடித்துள்ளனர். இங்கிலீஷ் விங்க்லீஷ், பேட் மேன், டியர் ஜிந்தகி ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்ற பால்கி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நிறைய நட்சத்திரங்கள் உள்ளதால் திரைக்கதையும் அதற்கு ஏற்றார் போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “இப்படி விருவிருப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த கதைக்கு துல்கர் சல்மான் ஏற்ற ஆள் தானா” என்ற கருத்தும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 


படம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள துல்கர், படம் அடுத்த மாதம் 23ஆம் தேதி வெளியாவதையும் உறுதி செய்துள்ளார்.