தியாகராஜன் குமாரராஜா


ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் தியாகராஜன் குமாரராஜா. ஒரே படத்தில் சினிமா ரசிகர்களை கவர்ந்து கல்ட் இயக்குநராக உருவானவர். அடுத்த எட்டு ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதியை வைத்து சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான மாடர்ன் லவ் ஆந்தலாஜியில் நினைவோ ஒரு பறவை என்கிற படத்தை இயக்கியதுடன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கவும் செய்தார். எல்லா பிரச்சனைகளையும் விலகி இருந்து அனுகுவது அவரது படங்களின் தனித்துவமாக இருக்கிறது. படங்கள் மட்டுமில்லாமல் குமாரராஜாவின் பேச்சை கேட்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தன்னைப் பற்றியோ தனது வேலை பற்றியோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பது. வாழ்க்கையை எளிமையாக அனுகும் பார்வை ஆகியவை ரசிகர்களை கவர்ந்த அம்சங்கள்.


மோடியை மறைமுகமாக கலாய்த்த குமாரராஜா






சினிமா தவிர்த்து அரசியல் குறித்த தனது கருத்துக்களையும் வெளிப்படையாக பேசி வருகிறார் குமாரராஜா. நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பேசிய குமாரராஜா பிரதமர் மோடியை மறைமுகமாக கலாய்த்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழ் கற்றுக்கொள்ள தனக்கு இருக்கும் ஆர்வம் பற்றி பேசினார் அப்போது ‘ நிறைய பேர் தமிழ் கத்துக்கனும்னு ஆர்வமா இருக்காங்க. எனக்கு நிகராக என்னை விட தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரு நல்லவர் தான். ஆனால் அவருக்கு நேரம் இல்லை. தமிழ் நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் எப்படியாவது தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இருக்கிறது. இந்த தேர்தல் அவருக்கு அந்த ஓய்வை கொடுத்து அவருடைய தமிழ் கற்க வேண்டிய ஆசையை நிறைவேற்றும் நேரம் கொடுக்கும் என்று நம்புகிறேன்” என்று குமாரராஜா கூறியுள்ளார். 




மேலும் படிக்க : Rathnam Box Office Collection: தடையை உடைத்த விஷால்.. கல்லா கட்டுகிறதா ரத்னம்? 2வது நாள் வசூல் நிலவரம்!


Cooku with Comali 5: செல்லம்மா அன்ஷிதா முதல் நாஞ்சில் விஜயன் வரை: குக்கு வித் கோமாளியில் இணைந்த 5 புது கோமாளிகள்!