தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி குஷ்பு தகவல் கூறியுள்ளார்.






 


இதுதொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது கணவர் சுந்தர்.சிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் நலமாக உள்ளார். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொண்டு, உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.