Just In





தற்கொலை பண்ணிகலாம்னு யோசிச்சேன்...மேடையில் உணர்ச்சிவசப்பட்ட பா ரஞ்சித்
தான் பள்ளியில் படிக்கும் போது தனது அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்து தற்கொலை செய்துகொள்ள யோசித்ததாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்

பாட்டில் ராதா
பா ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள படம் பாட்டில் ராதா. குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ். கருணா பிரசாத், மாலதி அசோக் நவின், சுஹாசினி சஞ்சீவ், சிரஞ்சீவி, ஓவியர் சௌ. செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனீஷா, மாதவி ராஜ், கலா குமார் (ஜெய பெருமாள்), அன்பரசி, சேகர் நாராயணா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். குடிப்பழக்கத்தை மையமாக வைத்து காமெடி டிராவாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்பத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இயக்குநர் மிஸ்கின் , வெற்றிமாறன் , லிங்குசாமி , பா ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்கள் இப்படத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ரஞ்சித் தான் பள்ளி படிக்கும்போது தற்கொலை செய்துகொள்வது பற்றி யோசித்ததாக பா ரஞ்சித் தெரிவித்தார்
தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்
" என் வீட்டில் என் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். என் அப்பா எங்களுக்கு எல்லாமே செய்திருக்கிறார். எங்கள் கல்வி , சாப்பாடு , டிரஸ் எல்லா விஷயங்கள் பற்றியும் அவர் யோசிப்பார். ஆனால் குடி என்று வரும் போது அவர் தன்னை இழந்துவிடுவார். என் அம்மா அதனால் நிறைய கஷ்டப்பட்டார்கள். ஒரு நாள் நான் 12 ஆவது படிக்கும்போது என் அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்று எனக்கு ஒரு நொடி தோன்றியது. இது என் வீட்டில் யாருக்கும் தெரியாது என் அண்ணன் இங்கே இருக்கிறார். குடி என்பது ஒரு நொய் என்பது என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. குடிப்பவர்களை பார்த்து அவர்கள் மேல் கோபம் தான் வரும் ஆனால் அவர்கள் அந்த நோயால் தன்னை இழந்து நிற்கிறார்கள் என்பது தாமதமாக தான் எனக்கு புரிந்தது. அன்று ஒரு நொடி எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது. எப்படியோ அதில் இருந்து நான் வெளியே வந்துவிட்டேன். என் அப்பா இறப்பதற்கு முன் எப்படியாவது வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது லிவர் செயலிழந்துவிட்டதால் அவர் இறந்துவிட்டார்" என பா ரஞ்சித் உணர்ச்சிவசமாக பேசினார்