மாமன்னன் படத்தைத் தொடர்ந்து தான் இயக்கி வரும் வாழை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


மாரி செல்வராஜின் அடுத்த படம்!


கலையரசன், நிகிலா, விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோரின் நடிப்பில் நான்கு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகி வரும் படம் வாழை.


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் முன்னதாக உருவாகி வந்த மாமன்னன் படப்பிடிப்பு  நிறைவடைந்த நிலையில், தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் சென்ற ஆண்டு இறுதியில் பகிர்ந்தார்.


அதன்படி வாழை படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் பகிர்ந்த நிலையில், சென்ற நவம்பர் 21ஆம் தேதி தூத்துகுடி, ஸ்ரீவைகுண்டம், கொங்கராயக்குறிச்சி பகுதியில் வாழை படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


வாழை அப்டேட்!


1994 ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தைக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்நிலையில், வாழை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மாரி செல்வராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் மாரி செல்வராஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.






மறுபுறம் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ் புத்தாண்டுக்கு படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Ilayaraja wishes RRR team : "கடுமையான உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்" - ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு இசைஞானி வாழ்த்து...