தனுஷ், ஐஸ்வர்யா தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ள நிலையில், அது வெறும் குடும்ப சண்டைதான் விவாகரத்து இல்லை என்று தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா கூறினார். இந்த நிலையில் தனுஷூம் ஐஸ்வர்யாவும் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டியோவில் உள்ள சித்தாரா ஹோட்டலில் தங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


தனுஷ் முதன் முறையாக தெலுங்கில் நடிக்கும் “வாத்தி” திரைப்படத்திற்காக அந்த ஹோட்டலில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தான் புதிதாக இயக்க இருக்கும் பாடலுக்காக தனது குழுவினருடன் ஐஸ்வர்யா அங்கு தங்கியிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.






 






 


காதல் முதல் விவாகரத்து வரை: காதல் மலர்ந்து முறிந்த கதை


காதல் கொண்டேன் படம் வெளியான சமயம் அது. அப்போதுதான் ஐஸ்வர்யாவிற்கு அறிமுகமாகிறார் தனுஷ். அடுத்த நாளே ஐஸ்வர்யாவிடம் இருந்து பூங்கொத்து ஒன்று தனுஷின் கைகளுக்கு செல்கிறது. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. 6 மாத காலம் காதலில் இவர்களின் செய்தி இரு குடும்ப வீட்டாருக்குத் தெரிய வர, ஐஸ்வர்யா தனுஷை விட 2 வயது மூத்தவராக இருந்த போதும், தம்பதியினர் உறுதியாக இருந்ததால், பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் கல்யாணம் 2004 - ல் நடந்தது. 2006 ஆம் ஆண்டு யாத்ரா பிறக்க, 2010 ஆம் ஆண்டு இராண்டாவது குழந்தையாக லிங்கா பிறக்கிறார்.




டைரக்டராக அறிமுகமான ஐஸ்வர்யா தனது  தனுஷை ஹீரோவாக வைத்து 3 படத்தை எடுத்தார். என்னதான் அது படம் என்றாலும், கணவனுடன் இவ்வளவு நெருக்கத்தில் மற்றொரு பெண்ணை ஐஸ்வர்யாவால் எப்படி வைத்து பார்க்க முடிந்தது என்பது கேள்வி அப்போது எழாமல் இல்லை. ஆரம்ப கால  பேட்டி ஒன்றில், ஐஸ்வர்யாவின் உறவை பற்றி தனுஷ் பகிர்ந்த போது, நாங்கள் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. 20 களின் நடுப்பகுதியில் எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதைத்தான் உங்கள் மனம் நம்புகிறது” என்று கூறியிருந்தார். ஆனால் 3 பட பிரோமோஷன் பேட்டிகளில், அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவே இருந்தது.




கருத்து வேறுபாடு 


2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தனுஷ் ஐஸ்வர்யாவுக்கிடையேயான கருத்து வேறுபாடு அதிகமானதாகவும், கதாநாயகிகளுடன் தனுஷ் நெருங்கி பழகுவது ஐஷ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் தனுஷ் நீண்ட நாட்களாக ஐஸ்வர்யாவை பிரிந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இரண்டு மகன்களும் தற்போது ஐஸ்வர்யாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வர, இவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டை நீக்க குடும்பத்தினர் பல முறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் எதிலும் பலன் கிடைக்கவில்லையாம்.


இவர்களின் முடிவை கேட்ட ரசிகர்களும், தனுஷ் அண்ணாவிற்கு நாங்கள் இருக்கிறோம் என்றும் ஐஷ்வர்யாவிற்கு ஆதரவாகவும் போஸ்ட்களை பறக்க விட, உடல்நிலை சரியில்லாத ரஜினி தைரியமாக இருக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.


இதனிடையே ஐஷ்வர்யாவிடமும், தனுஷிடமும் குடும்பத்தினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்களாம். ஆனால், இருவரும் தத்தமது முடிவுகளில் உறுதியாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.