இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, கத்தி போன்ற படங்களில்  உதவி இயக்குநராக இருந்தவர் அஜய் ஞானமுத்து . இவரது அறிமுக இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் டிமாண்டி காலனி . இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து அஜய்  ‘இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இந்தப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

  


இதற்கிடையே, டிமாண்டி காலனி படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் அஜய் தெரிவித்தார். மேலும் படத்தை கோப்ரா படத்தில் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குநர் வெங்கி வேணுகோபால் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் கதை , திரைக்கதை , வசனம் , தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை அஜய் ஞானமுத்து கவனிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


 






இந்த நிலையில்தான் அஜய் ஞான முத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான  ‘கோப்ரா’  படம் வெளியானது. ஆனால் இந்தப்படம் எதிர்பாராத வெற்றியை பெறாமல், படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் துவண்டு போன, அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி படத்தின் இராண்டாம் பாகத்தை தானே இயக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இன்று இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.