தன் திறமையான நடிப்பாலும், தனித்துவமிக்க கதைத் தேர்வு, தன் கருத்துக்களை துணிந்து பேசுவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தியாவின் பிரபல முகமாக அறியப்படுபவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்( Deepika Padukone).


தீபிகா படுகோன்( Deepika Padukone) இன்ஸ்டாகிராமில் தனது குழந்தைப் பருவ நினைவுகளை அடிக்கடி பகிர்வது வழக்கம். சமீபத்தில் தான் 7ம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில், ‘இதுதான் என் முதல் மற்றும் இறுதி கவிதை’ என்று குறிப்பிட்டு கவிதையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.






தீபிகாவின் கவிதை 'நான்' (I Am) என்று தலைப்பில், ’நான் அன்பு மற்றும் அக்கறையின் குழந்தை' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வது போன்று அமைந்துள்ளது. தீபிகாவின் கவிதை எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியிருந்தாலும், உணர்சிகள் மிகுந்த கவிதையாக இருக்கிறது.


தீபிகா படுகோன் எழுதுய கவிதை,


 “நான் அன்பும் அக்கறையும் கொண்ட குழந்தை. நட்சத்திரங்கள் எவ்வளவு தூரம் சென்றடைகின்றன என்பதில் ஆச்சரியமாக இருக்கிறது. அலையின் ஓசை எனக்குக் கேட்கிறது.  ஆழமான நீல கடலைப் பார்க்கிறேன். நான் கடவுளின் அன்பான குழந்தையாக இருக்க விரும்புகிறேன். நான் அன்பும் அக்கறையும் கொண்ட குழந்தை.


மலரும் பூவாக நான் இருப்பதாக என்னை நினைத்து கொள்கிறேன்.


நான் கடவுளின் அமைதியான கரங்களை உணர்கிறேன்.


தூரத்தில் உள்ள மலைகளின்  முகடுகளைத் தொடுகிறேன்.


நான் எல்லோராலும் விரும்பப்பட்டால், அதனால் நான் கவலையடைகிறேன். கடவுளின் கருணையும், அன்பு கரங்களின் தொடுதலும் தேவைப்படுபவர்களுக்காக நான் அழுகிறேன்.


நான் அன்பும் அக்கறையும் கொண்ட குழந்தை.


 


வாழ்க்கைக்கு முடிவொன்று இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன்.


நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் சொல்வேன்.


நான் கனவு காண வேண்டியதை, கனவு காண்கிறேன்.


சிறப்பானவற்றை திறம்பட செய்ய முயற்சிக்கிறேன்.


 நான் மிகச் சிறந்தவற்றிற்கு தகுதியானவள் என்று நம்புகிறேன்.


 நான் அன்பும் அக்கறையும் கொண்ட குழந்தை!”


என்று சொல்கிறது.


இதற்கு தீபிகாவின் ரசிகர்கள், கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண