தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்  நடிகை தீபா. மாயாண்டி குடும்பத்தார்,  கடைக்குட்டி சிங்கம் படங்களில்  அக்கா கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். வெகுளியான பேச்சு குழந்தை மனம் கொண்ட இவர் பேசுகையில் கிராமத்து வாசம் வீசும். அதிலும் இவரது வெகுளித்தனமான சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்துவிடுவார். 


திரைப்படங்கள் மட்டுமின்றி நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு, ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தற்போது இவர் 
கணவர் ஷங்கருடன் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளர்.


இந்நிலையில் இவரது உருவத்தை மிஸ்டர் அண்ட் மிஸஸ் போட்டியில் கலாய்த்து பேசினர். இதற்கு பதிலளித்த தீபா, "நாங்களும் ஒல்லியாக இருந்தவர்கள் தான். இப்போ எப்படி குண்டா அகினோம்னு யோசிச்சு பாத்தீங்களா? நாங்க உயிரைக் கொடுத்து சாமி. இரண்டு உயிரை கொடுத்து உங்கள் வம்சத்தை தொலைக்க வைத்திருக்கிற தாய். தாய் வடிவத்தைப் பார்த்து எப்படி அப்படி நீ சொல்லலாம்? நீ வீட்டுக்கு போகும்போது உன் அம்மா எதிர் பார்த்துட்டு இருப்பாங்க. அதே மாதிரி தான் என எதிர்பார்த்து இரண்டு குழந்தைங்க காத்துட்டு இருக்கு. அதுனால ஒருத்தரை உருவ கேலி  பண்ணாதீங்க" என பேசியுள்ளார்.






இதுகுறித்து நடிகர் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “இதற்கு மேல் இதை இவ்வளவு அன்பாகவும் அழகாகவும் உரக்க கூற முடியுமா என தெரியவில்லை…இனியாவது உருவக்கேலிகளையும் தொழில் சார்ந்த கேலிகளையும் தவிர்ப்போம் நண்பர்களே…. தலைவணங்குகிறேன் தாயே” என குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் நவீனும் இதை ஷேர் செய்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ முடிவில், தொகுப்பாளர்களை கலைப்பதற்காக எழுதிக்கொடுத்து இதை பேசியதாக தீபா சிரித்துக்கொண்டே கூறினார். தீபா தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார்.