பெண்களுக்கு எதிரான அநீதி என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக திரைத்துறையை சார்ந்த பெண்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திறையுரையை சார்ந்த பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகிறார் பின்னணி பாடகி சின்மயி.


மீடூ மூலம் சினிமா துறையை சேர்ந்த பலரும் சிக்கி வருவது பேரதிர்ச்சியாக இருந்து வருகிறது. வைரமுத்து மீது சின்மயி முன் வைத்த புகார் முதல் இன்று வரை திரைத்துறையில் பெண்களுக்கு சந்திக்கும் துன்புறுத்தல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார்.




அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, நெகட்டிவ் கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்து வரும்  நடிகர் ஜான் விஜய் பற்றிய மீண்டும் பதிவை வெளிக்கொண்டு வந்துள்ளார் சின்மயி. மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜான் விஜய்க்கு எதிராக வெளியான நியூஸ்மினிட் அறிக்கைக்கு பிறகு பத்திரிகையாளரிடம் ஜான் விஜய் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டு இருந்ததை தொடர்ந்து, பெண்களிடம் அவர் பொதுவாக நடந்து கொள்ளும் விதம் குறித்து  பெண் புகார் அளித்துள்ளார். 


அந்த வகையில் தற்போது பெண் ஒருவரிடம் இருந்து ஜான் விஜய்க்கு எதிராக புகார் ஒன்று சின்மயிக்கு மெஸேஜ் மூலம் வந்துள்ளது. அதை தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். 


"நடிகர் ஜான் விஜய் ரெகுலராக சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்புகளுக்கு வருபவர். அங்கு வரும் பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவார். அவர்கள் எங்கே சென்றாலும் பின் தொடர்ந்து செல்வார். 'நோ' என சொன்னாலும் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் ஒரு செலிபிரிட்டி என்பதால் அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என தொடர்ந்து தொல்லை கொடுப்பார். அவருடன் சாதாரணமாக பேச கூட பெண்கள் விருப்பம் காட்டவில்லை என்றாலும் அவரின் தொல்லை நீடிக்கும்" என அந்த பெண் அனுப்பிய மெசேஜை பகிர்ந்துள்ளார் சின்மயி. 






சின்மயி பகிர்ந்துள்ள இந்த போஸ்ட் பார்த்த நெட்டிசன்கள் ஜான் விஜயை பயங்கரமாக திட்டி தீர்த்து வருகிறார்கள். செலிபிரிட்டி என்ற காரணத்திற்காக பெண்கள் அவருக்கு அடிபணிய வேண்டுமா? என கொந்தளித்து வருகிறார்கள். ஜான் விஜய் இதுகுறித்து இன்னும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது