நடிகர்கள் ரஜினிகாந்த்,பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட 700 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். பாகுபலி படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரகதமணி சந்திரமுகி-2 படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி ரசிகர்கள் அனைவரும் ’நடிகர் ரஜினிகாந்த் நடிச்சா நல்ல இருக்கும், அதுவும் இல்லனா ஸ்பெஷல் அப்பியரன்ஸில் ஆவது நடித்து இருக்கலாம்’ என ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.


பேய் படங்களில் காமெடியை இணைத்து தமிழ் சினிமாவுக்கு புது ஃபார்முலாவை தனது படங்கள் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் லாரன்ஸ். நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா, சிவாலிங்கா என பல பேய் படங்களில் ஹிட் அடித்து, இப்போது சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க களம் இறங்கியுள்ளார். லாரன்ஸின் ஜோடியாக ஆண்டிரியா, ராஷி கண்ணா , த்ரிஷா நடிக்கவுள்ளதாக பேசப்பட்ட நிலையில், நடிகை லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியானது.


நேற்று ராகவா லாரன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில்  நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், இன்று சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மைச்சூரில் எனது தலைவர் மற்றும் குருவின் ஆசிகளுடன் தொடங்கவுள்ளது. உங்கள் அனைவரின் நல்லாசிகளையும் பெற நான் விரும்புகிறேன் என ட்வீட் செய்துள்ள நிலையில், தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் பூஜையை மைச்சூரில்  நேற்று துவங்கியதாக லைகா தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.






லைகாவின் சமீபத்திய ட்வீட்டில் உள்ள புகைப்படத்தில் இயக்குனர் P வாசு,நடிகர் ராகவா லாரன்ஸ், நகைச்சுவை நடிகர் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா ஆகியோர் உள்ளனர். படப்பிடிப்பை துவங்குவதற்காக மாலையும் கழுத்துமாக நேற்று பூஜை செய்து உள்ளனர்.