அம்புலி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சனம்ஷெட்டி. பின்னர், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்துள்ளார. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்ற தொடர் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானார். பெங்களூரில் பிறந்த இவர் தற்போது சென்னை, திருவான்மியூரில் வசித்து வருகிறார். திரைப்பிரபலம் என்பதால் இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை இவர் பதிவிட்டுவருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.




இந்த நிலையில், சென்னை, திருவான்மியூரில் நடிகை சனம் ஷெட்டி புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக குறுந்தகவலை தொடர்ந்து அனுப்பி வருவதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அந்த புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பிவைத்தனர். சனம் ஷெட்டி 2016-ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.


திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பாக சனம் ஷெட்டி வெளிநாட்டில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்தவர். பிக்பாஸ் என்ற தொடர் மூலமான இவர், நடிகர் தர்ஷனை காதலித்ததும், பின்னர் அந்த காதல் முறிந்ததும் குறிப்பிடத்தக்கது.