விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5  நிகழ்ச்சியானது அண்மையில் நடந்து முடிந்தது. டைட்டில் வின்னராக, ராஜூ அறிவிக்கப்பட்ட நிலையில், ரன்னராக ப்ரியங்கா அறிவிக்கப்பட்டார். எல்லா சீசன்களை போலவும் இந்த சீசனுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், விஜய்டிவி பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை வெளியிட்டது.






அதன்படி இந்த நிகழ்ச்சியின் டேக் லைனான “ தொலைச்ச இடத்துலதான் தேட முடியும், தோத்த இடத்துலதான் ஜெயிக்க முடியும்” என்பதற்கேற்ப, கடந்த சீசன்களில் பல்வேறு காரணங்களால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதன்படி வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், அபிராமி, நிரூப் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.




சொல்லி வைத்ததுபோல சண்டை சச்சரவு என தொடங்கியுள்ளது பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டில் உள்ள பலரும் தங்களது முந்தைய பிக்பாஸ் அனுபவங்களையும், பிக்பாஸுக்கு பின் சந்தித்த  விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்ட வனிதா, சக போட்டியாளராக கலந்துகொண்ட சுஜா வருணியை வெளுத்து வாங்கினார்.  அதற்கு காரணம் சுஜாவின் கணவர் பதிவிட்ட ட்வீட். சுஜாவின் கணவர் பதிவிட்ட ட்வீட்டில், பிக்பாஸ் 3வது சீசனின் தர்ஷன், ஷெரின் இருவரும் நெருக்கமாவே இருந்தனர். 


இவர்கள் இருவரும் பிரிய முக்கிய காரணமே வனிதாதான். தர்ஷன் மீது ஆசைகொண்ட வனிதா அவர்களை பிரிக்கப் பார்த்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த ட்வீட்டை பார்த்து கவனித்துக்கொண்ட வனிதா, அது தொடர்பாக பிக்பாஸ் அல்டிமேட்டில் சுஜாவிடம் கேள்வி எழுப்பினார். நானும், தர்ஷனும் அக்கா, தம்பி மாதிரி பழகினோம். அதனை கொச்சைப்படுத்தி உன் கணவர் பதிவிட்டார். அதனால் உன் மீது எனக்கு கோபம் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண