பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் முதலாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடம்பிடித்த கவிஞர் சினேகன் மீண்டும் களமிறங்கியுள்ளார். இவருக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. 


அவர்களுடைய திருமணம் முடிந்த சில நாட்களில் கவிஞர் சினேகன் பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய கனவருக்காக 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்த்து வருவதாக நடிகை கன்னிகா ரவி தெரிவித்துள்ளார். 






இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “படையப்பா படத்தின் நீலாம்பரியை போல் 24 மணிநேரமும் இந்த பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பதிவுடன் அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதுபோல் படங்களுடன் ஒரு வீடியோவும் பதிவிட்டுள்ளார். 


விஜய்டிவி பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இந்த நிகழ்ச்சியின் டேக் லைனான “ தொலைச்ச இடத்துலதான் தேட முடியும், தோத்த இடத்துலதான் ஜெயிக்க முடியும்” என்பதற்கேற்ப, கடந்த சீசன்களில் பல்வேறு காரணங்களால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதன் படி வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், அபிராமி, நிரூப் உள்ளிட்டோர்பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: “பிச்சைக்காரன் கூட....” : மீடியாவில் இருந்து விலகுவது குறித்து ‘கனா காணும் காலங்கள்’ புலி