பிக்பாஸ் சீசன் 5ன் வீக்கெண்ட் எபிசோடுக்கான இன்றைய தினத்தின் இரண்டாவது புரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் பொதுவெளியில் ஒப்புக் கொள்ள முடியாத எதையும் செய்யாதீர்கள் என பாவனியைக் கண்டிக்கிறார். உண்மை என்பது யாரைப் பார்த்து சொன்னாலும், விஷயம் ஒன்றாகத்தான் இருக்கும். நீங்க பேசும்போது நானும்- சுருதியும் காயினை எடுக்கத் திட்டமே போடலைங்கறீங்க. நாங்க பார்த்தது என்னன்னா? நீங்களும், அவங்களும் நான் இதை செய்யப் போகிறேன், இப்படி செய்யப் போகிறேன், அப்ப நீங்க எடுத்துக்கோங்கனு சொல்ற வரைக்கும் எல்லாரும் பார்த்தாங்க. ஆனாலும் அதை அப்படியே மறுக்கிறார் பாவனி. நாங்கள் இதை ப்ளேனே பண்ணல என அடித்துச் சொல்கிறார். நம்ம சொல்றது சரியா, இல்லையானு சந்தேகம் இருக்கறப்போதான் மாத்தி மாத்தி பேச வேண்டியிருக்கும்.பொதுவெளியில் ஒப்புக் கொள்ள முடியாத எதையும் செய்யாதீர்கள் என ஆங்கிலத்தில் குரலுயர்த்தி கண்டிக்கிறார் கமல். பாவம் பாவனிக்கு கண்டிப்பாக இந்த வாரம் குறும்படம் உண்டு போல. 






முன்னதாக ஏற்கெனவே வெளியான முதல் புரோமோவில் வழக்கம்போலவே டிப் டாப்பாக உடை அணிந்து வந்துள்ளார் கமல் ஹாசன். இது விதியா, விதிவிலக்கா, விதியில இருக்கா?, விதிமீறலா, என் தலைவிதியா அப்படின்னு கூட விவாதிச்சிருக்காங்க. இன்னும் சில பேர் சனிக்கிழமை வரட்டும் நான் அவரிடமே பேசிக்கறேன் அப்படின்னு சொல்லியிருக்காங்க. நமக்கும் பேச வேண்டியது இருக்கு.. ராத்திரி பேசுவோம்” என்கிறார் கமல்.
கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் போட்டியாளர்களிடையே அழுகையும், சண்டையுமாக சென்றது. சுருதி தாமரைச் செல்வியின் காயினை எடுத்ததிலிருந்து ஆரம்பித்தது எல்லாமும். சண்டையில் பாவனியும் போய் மாட்டிக் கொண்டார். இசை வாணியின் லீடர்ஷிப்புக்கு சில எதிர்ப்புக் குரல்களும் ஆங்காங்கே இருந்தன. கேட்கலன்னா, நான் கமல் சார்ட்டயே பேசிக்கிறேன் என சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் இதுகுறித்தெல்லாம் கமல் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 






29-ஆம் தேதி எபிசோடில், கிராமத்தாரா நகரத்தாரா பட்டிமன்றம் நடந்தது. அதில் ஆளாளுக்கு பல விஷயங்களைப் பேசியது செம்ம எண்ட்டர்டெய்ன்மெண்ட். அதில் உணவு விஷயத்தில் கிராமத்தாரும், பிக்பாஸ் ஆட்டம் புரிந்து விளையாடுவதில் நகரத்தாரும் இசையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமத்தாரா, நகரத்தாரா பட்டிமன்றம் போய்க்கொண்டிருக்கும்போது நாணயங்களைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார் சுருதி. தாமரை பொங்கியெழுந்து மீண்டும் சாமியாடத் தொடங்கிய பின்புதான் அனைவரும் அமைதியானார்கள். தாமரையை அடக்கி வாசிக்கச் சொல்லி ராஜு கொடுத்த அட்வைஸ் ஸ்வீட்டான விஷயம். 
ஆனால் வீக்கெண்ட்டின் குறும்பட ஷோவுக்காக எல்லாரும் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது


தவிர சுருதி அணியும் உடை பற்றி தாமரைச் செல்வி பேசியதும் ஆடியன்ஸ்களுக்கு கொஞ்சம் எதிர் ரியாக்‌ஷன்களைக் கொடுத்தது. உடை அவரவர் விருப்பம் சிலர் கமெண்ட் செய்தனர். சிபி, தாமரைச் செல்வியைக் கண்டித்த விதம் ஆடியன்ஸ்களிடமிருந்து ஹார்ட்க்களை அள்ளிக் கொடுத்தது.