விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. பிக்பாஸ் 5வது சீசனின் மாபெரும் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் போட்டியின் வெற்றியாளராக ராஜூ வெற்றி பெற்றார். இந்த இறுதிப்போட்டி நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய தொடருக்கான அறிவிப்பும் வெளியானது.இதுவரை விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்தது. இந்த புதிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை 24 மணிநேரமும் கண்டுகளிக்கலாம்.


இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள சில போட்டியாளர்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் போட்டியில் வனிதா விஜய்குமார், அனிதா சம்பத், கவிஞர் சினேகன், பாலாஜி முருகதாஸ், ஷெரின், ஷாரிக், நகைச்சுவை நடிகர் பரணி, நடிகை ஓவியா, ஜூலி, நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி உள்ளிட்ட சிலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 




முன்னதாக பிக்பாஸ் அல்டிமேட் தொடர்பான டீசர் வெளியானது. அந்த டீசரில் பிக்பாஸ் அல்டிமேட்டிற்காக புதிய வீடு கட்டிக்கொண்டிருப்பது போலவும், அந்த வீட்டிற்குள் கமல்ஹாசன் உள்ளே வருவது போலவும் உள்ளது. பின்னர், கமல்ஹாசன் சுவரை தூக்கிக் கட்டுங்க. ஏனென்றால்,. மாட்டுக்கார காளையையும் பாத்துருக்கோம். சுவரையே தாண்டி குதிக்குறவங்களையும் நாம பாத்துருக்கோம் என்று பேசுகிறார். பின்னர், ஏற்கனவே பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.






24 மணிநேரமும் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டை கண்டுகளிக்கலாம் என்று கமல்ஹாசன் கூறுகிறார். மேலும், தொலைச்ச இடத்துல தானே தேட முடியும். தோத்த இடத்துலதானே ஜெயிக்க முடியும். விரைவில் நம்ம டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்ல் மட்டுமே என்று இந்த ப்ரோமோ முடிகிறது. 24 மணிநேரமும் இனி பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை கண்டுகளிக்கலாம் என்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  


மேலும் படிக்க: அந்த பிகினி 17ஆயிரம் ரூபா.! இன்ஸ்டாவை பற்றவைத்த ஜான்வி! உடையை தேடிய ஃபேன்ஸ்!!