பிக்பாஸ் தமிழ் 


பிக்பாஸ் தமிழின் 8 ஆவது சீசன் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த ஆண்டு  நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி வழிநடத்தப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்த நிலையில் துவக்க் விழாவிலேயே தனது எதார்த்தமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார் விஜய் சேதுபதி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன் மிகவும் தொய்வாக சென்றதால், இந்த சீசனை அவர் விறுவிறுப்பாக தனித்துவமாக கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கலாம். 


 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாச்சனா, ரஞ்சித், தீபக், சுனிதா, ஆர்.ஜே. ஆனந்தி, ஜெஃப்ரே, முத்துக்குமரன், சௌந்தர்யா, அன்ஷிதா, ஜாக்குலின், சத்யா, விஜே விஷால் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் கவனமீர்க்கும் விதமாக அமைந்துள்ளது இதில் உள்ளே நுழைந்த ஒரே நாளில் சாச்சனா வெளியேறினார். மூன்றாவது நாளான இன்று நடிகர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் ஆகிய இருவர் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது. 


நடிகர் ரஞ்சித் மற்றும் ரவிந்தர் மோதல்


இந்த சீசனில்  நடிகர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் முக்கியமான போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள். நடிகர் ரஞ்சித் சமீபத்தில் கெளண்டம்பாளையம் என்கிற படத்தை இயக்கி சர்ச்சையை கிளப்பினார். மறுபக்கம் தயாரிப்பாளர் ரவிந்தர் கடந்த பிக்பாஸ் சீசன்களை கடுமையாக விமர்சித்து தொடர்ச்சியாக பேட்டிகளில் பேசி வந்தார். இருவரும் ரசிகர்களுக்கு ஈஸ்சியாக கண்டெண்ட் கொடுக்கக் கூடியவர்கள் என்பதால் இவர்கள் மீது ரசிகர்களின் கவனம் அதிகம் குவிந்துள்ளது. 






எதிர்பார்த்தது போலவே இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு அது அடிதடி வரை சென்றுள்ளது. பிக்பாஸ் 3 ஆவது நாள் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில் ரஞ்சித் மற்றும் ரவிந்தர் இடையில் கருத்து மோதல் நடக்கிறது. மற்ற போட்டியாளர்கள் இவர்களை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் சமாதானம் செய்ய வருபவர்களையே ரவிந்தர் கடுமையாக பேசி திட்டுகிறார். நிலைமை ஒடுகட்டத்திற்கு மேல் மோசமாகி ரஞ்சித் மற்றும் அடிதடியில் இறங்குகிறார்கள். அவர்களை மற்றவர்கள் தடுக்கிறார்கள். சென்ற சீசன் சுத்த போர் என்று ரசிகர்கள் சொன்ன நிலையில் இந்த சீசன் ஆரம்பமே அடிதடியில் தொடங்கியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்திப் படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.