பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சி அதன் இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ள நிலையில், 83 நாள்களைக் கடந்து நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. 


இன்று கமல்ஹாசன் (Kamal Haasan) பங்கேற்கும் வீக் எண்ட் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், போட்டியாளர்கள் நேற்றே பஞ்சாயத்துகளைத் தீர்த்து ஆசுவாசமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளில் போட்டியாளர்களிடம் “உங்கள் லட்சியம் என்ன?” கமல் கேட்கிறார். அதற்கு “வித்தியாச வித்தியாசமான வேடங்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என எனக்கு ஆசை” என ரவீனா கூறுகிறார்.


தொடர்ந்து விசித்ரா “மனதுக்கு திருப்தியான பாத்திரத்தை நான் செய்ததில்லை” என சொல்ல, “இருபது வருஷம் முன் இதுபோல் ஒரு ஷோவுக்கு வருவீர்கள் என நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள்” என கமல் சொல்கிறார். விசித்ராவும் அதை ஆமோதிக்க, அடுத்து சரவண விக்ரமிடம் கமல் இதே கேள்வியை எழுப்புகிறார்.


அதற்கு “நான் இதை சொன்னால் ஒரு இதுவாக இருக்கும்.  உங்கள தாண்டனும்னு எனக்கு ஆசை” எனக் கூறுகிறார். அதற்கு கமல்ஹாசன் கூலாக “நீங்கள் சொல்லலைனா வேற யார் இப்படி சொல்லுவா?” என மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.


 



டைட்டில் வின்னர் சரவண விக்ரம் என பல ட்ரோல்கள் குவிந்து வந்தாலும், மற்றொருபுறம் பிக்பாஸில் இருக்கும் ஒரே சூதுவாது தெரியாத ஆள் என மற்றொருபுறம் அவருக்கு ஆதவுகளும் கடந்த சில வாரங்களாக பெருகின. இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவண விக்ரம் வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.