Bigg Boss 7 Tamil: பிரதீப் என்னை ஒருபோதும் அவமதித்ததில்லை என்று மாயா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


பிக்பாஸ்:


கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 7வது சீசனில் முதலில் அனன்யா ராவ், வினுஷா தேவி, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.


தற்போது டான்சர் ஐஷூ,சரவண விக்ரம், கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோர் உள்ளே அனுப்பப்பட்டனர். தொடர்ந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் பாடகர் கானா பாலா, பட்டிமன்றப் பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா ராவ், பவா செல்லதுரை, யுகேந்திரன், வினுஷா தேவி, விஜய் வர்மா, அன்ன பாரதி ஆகியோர் வெளியேறினர். 


ரெட் கார்டு சர்ச்சை:


இதற்கிடையில், கடந்த வாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. வார கடைசியில் கமல் முன்பு பெண் போட்டியாளர்கள் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி போட்டியாளர் பிரதீப் ஆண்டனி மீது குற்றம் சாட்டினர்.  இதனால் அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற விஷயங்களை தட்டிக் கேட்காமல் பெண்கள் சொன்ன ஒரு காரணத்துக்காகவே இந்த விவகாரம் இந்த அளவுக்கு சென்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மேலும், வேண்டும் என்றே கார்னர் செய்து பிரதீப்பை அனுப்பியதாக அர்ச்சனா, விசித்ரா மற்றும் தினேஷ் பிக்பாஸ் வீட்டில் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் இரண்ட அணிகள் இடையே கடும் சண்டை வெடித்து வருகிறது.


"பிரதீப் என்னை ஒருபோதும் அவமதித்ததில்லை”


இந்நிலையில்,  ரெட் கார்டு கொடுக்கப்பட்டது தொடர்பாக ரவீணாவிடன் மாயா பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ”பிரதீப் இந்த விட்டில் இருப்பது பாதுகாப்பு இல்லை என ஐந்து பேர் சொன்னோம்.  இதனை கேட்டு கமல் சார் அப்படியே விட்டுவிடுவாரா? எப்படி விடுவாரு? ஐந்து பேர் பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறோம். இத்தனைக்கும், பிரதீப் என்னை ஒருபோதும் அவமதித்ததில்லை. பிரதீப், உங்கள் அனைவரையும் அவமரியாதை செய்வதை நான் பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் அனைவரும் கூறுவதால் நான் உங்களுடன் நின்றேன். அவன் நல்லவன் தான். யாரும் அவன கேட்டவன் சொல்லல. எனக்கு ஒரு இப்பவும் ஒரு பயம் இருந்துட்டு இருக்கு. பிக்பாஸ் வீட்டிற்குள் இவ்வளவு பண்ணிட்டோம். நான் வெளியே போன பிரதீப் என்னை எதாவது பண்ணுவானோனு ஒரு பயம் இருக்கு. அந்த நேரத்தில், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் வரமாட்டாங்க. என்னை நான் தான் பார்த்துக்கனும்" என்று மாயா பேசியுள்ளார்.