பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எந்த ஒரு தங்கு தடையும் இன்றி விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் கலவரமாக ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 58வது நாளுக்கான இன்றைய எபிசோட்  ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


பூர்ணிமாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே கசமுசா என்ற பொதுவான கருத்து பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும் அல்ல வெளியேயும் அது தான் இருக்கிறது. அப்படி பட்ட நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில் விஷ்ணுவும் பூர்ணிமாவும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் இருக்க இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "மாஸான ஒரு வில்லன் தான் படத்தை தூக்கி நிப்பாட்டுவான். ஹீரோவை விட அதிக வெயிட்டேஜ் வில்லனுக்கு இருந்தால் மட்டுமே தான் அந்த படம் ஹிட்டாகும். நான் ஒப்பான சொல்றேன். என்னை வில்லனா கூட பாத்துக்கோங்க. கடைசி வரைக்கும் நான் இருப்பேன். நான் வில்லனாவே இருந்துட்டு போறேன்" என விஷ்ணு பூர்ணிமாவிடம் தன்னை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு வைத்து பேசிகொண்டு இருக்கிறார். 


 



"இப்ப வரைக்கும் நான் நானாக தான் இருக்கேன். இந்த ஷோகாக நான் யார் கூடவும் சேர்ந்து எதுவும் பண்ணல. நானும் விஷ்ணுவும் பேசுறதை பாக்குறாங்களா. விஷ்ணு வந்து என்னை கன்ட்ரோல் பண்ணறாரு என நினைப்பாங்க" என பூர்ணிமா தன்னுடைய நிலைப்பாட்டை கூறுகிறாள். உண்மையா பூர்ணிமா அவங்களாக தான் இருந்து விளையாடுறாங்களா இல்லை மாயாவின் நிழலாக இருக்கிறாரா என்பது பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பது தான் ரசிகர்களின் பொதுவான கருத்து. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய பிக் பாஸ் எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகிவிட்டது. 


 



நிக்சனை வெளியே அனுப்ப ஸ்கெட்ச் போட்டு இருந்த மாயாவும் பூர்ணிமாவும் அதற்கான வேலையை துவங்கி விட்டார்கள். மாயா லிவிங் ஏரியாவில் உட்கார்ந்து கொண்டு "நல்லா சேவ் பண்றீங்க நிக்சன" என சொல்ல "இப்போ இங்க என்ன அநீதி நடந்தது?" என பூர்ணிமா கேட்க "ஏங்க அநீதி நடந்தது என சொல்லி நான் மணியை அடிக்கலாமே " என மாயா சொல்ல "உங்களுக்கு வேணும்னா நீங்க அடிச்சுக்கோங்க" என பூர்ணிமா கேம் விளையாட "அப்போ நீங்க ஏன் எல்லாரையும் பண்ணாதீங்க என கன்வின்ஸ் பண்றீங்க. வேற ஏதாவது இன்டெரெஸ்ட்டிங்கா பண்ணி இருப்பேன்?" என மாயா பந்தை பூர்ணிமா பக்கம் போட "முடிஞ்சா பண்ணிக்கங்க" என பூர்ணிமா அடித்து விடுகிறாள். 


 




மாயா உடனே இந்த விளையாட்டை விஷ்ணு பக்கம் திரும்புகிறாள். "விஷ்ணு அடிச்சா நான் பாயிண்டை எடுத்து வைக்கிறேன்" என மாயா சொல்ல "பூர்ணிமாவுக்கு ஒகே இல்லை என்றால் விஷ்ணு அடிக்கவே மாட்டான்" என விசித்திரா உள்ளே நுழைய "ஐயோ அதெல்லாம் கிடையவே கிடையாது" என பூர்ணிமா பதற "நல்லா பண்றீங்க பூர்ணிமா. நீங்க சொன்ன மாதிரியே நிக்சனை காப்பாத்திட்டீங்க" என மாயா சொல்ல விஷ்ணு மணியை அடிக்க போகிறாரா இல்லையா என்பது சஸ்பென்ஸ்.