பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வதற்கான வாய்ப்புகளை கொண்ட ஷிவின் இதுவரை என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை கலந்துகொண்டார். ஆனால், இவர் சில நாட்களிலேயே 
அந்த வீட்டினை விட்டு வெளியேறினர். இதனையடுத்து 6-வது சீசனில் சிங்கப்பூரில் மாடலிங் செய்து வந்த ஷிவின் கணேசன் என்ற திருநங்கை ஒருவர், இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று, போட்டிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் சரியாக செய்து வருகிறார்.






இந்த சமூகத்தில், திருநங்கைகள் பற்றி பலரும் தவறாக நினைத்து வருகின்றனர். அந்த எண்ணத்தை முறியடிக்கும் வகையில், 
ஷிவின் செயல்பட்டுவருகிறார் என்றே சொல்லவேண்டும்.நிகழ்ச்சி துவங்கியபோது, ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள் என்ற டாஸ்க்கில் பேசிய ஷிவின், ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்தினரின் குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.






மற்றவர்களூடன் வீன் வம்பிற்கு செல்லாமல், தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளையும், டாஸ்க்குகளையும் சரியாக செய்து வருகிறார். அத்துடன் மற்றவர்களிடம் நடுநிலையாகதான் நடந்து வருகிறார்.


கதிரவன் மேல் இவருக்கு விருப்பம் உள்ளது, இது மற்ற போட்டியாளர்களுக்கும் தெரியும். ஆனால், அதன் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் போட்டியை போட்டியாக பார்த்து, தெளிவான எண்ணத்துடன் இவர் விளையாடி வருகிறார்.ஸ்டராங்கான போட்டியாளராகிய விக்ரமனே வியந்துபோகும் அளவிற்கு ஷிவினின் கேம் ப்ளே உள்ளது. 






சிறு வயதில் ஏற்ப்பட்ட சில விஷயங்கள், இவரை பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. அதனால், ஷிவின் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிடுவார். இதை சிலர், பல முறை துருப்பு சீட்டாக பயன்படுத்தி அவரை காயப்படுத்தினார்கள்.


பொதுவாக, ஒளிபரப்பாகும் அந்த சேனலில் உள்ள போட்டியாளர்களை மட்டுமே இறுதிவரை தக்கவைக்கும் டெம்பளேட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளது. ஆனால், இம்முறை வெளியாட்களே 100 நாட்களு தாக்குபிடிக்கும் சூழல் நிலவி வருகிறது. அத்துடன், ஷிவினுக்கு ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. அதனால், பலரும் ஷிவின்தான் இந்நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று சொல்லி வருகின்றனர்.