Bigg Boss 6 Tamil : நயன்தாராவுடன் நடிக்க வேண்டும்...ஆசையை சொன்ன ஜிபி முத்து...கமல் என்ன சொன்னார் தெரியுமா?

எப்போதும் முதல் வாரம் அடக்கி வாசிக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் முதலிலேயே எகிற ஆரம்பித்ததால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்தது.

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் ஜிபி முத்துவை கமல் கலாய்க்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. 

Continues below advertisement

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது.இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

எப்போதும் முதல் வாரம் அடக்கி வாசிக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் முதலிலேயே எகிற ஆரம்பித்ததால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. பஞ்சாயத்துகளும் நடந்ததால் வார இறுதியில் வரும் கமல் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பெரிதாக எந்த கறாரும் காட்டாமல் ஜாலியாகவே கொண்டு சென்றார். 

குறிப்பாக ஜிபி முத்துவை அவர் கலாய்க்க நினைத்து, கடைசியில் கமலே ஜிபி முத்துவிடம் பல்பு வாங்கியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் மறுபடியும் ஜிபி முத்துவே இடம் பெற்றுள்ளார். அவருக்கு பிக்பாஸ் என்று சொல்ல வரவில்லை. பிக் பாக்ஸ் என சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் ஜிபி முத்து என்றாலே அவருக்கு வரும் தபால்களை படிக்கும் காட்சிகள் தான் நினைவுக்கு வரும். 

அதனால் இன்றைய எபிசோடில் அவருக்கு தபால் பெட்டி வருகிறது. அதில் இருக்கும் லெட்டரில் முருங்கைக்காய் அனுப்பப்பட்டுள்ளது(கடந்த வார எபிசோடில் முருங்கைக்காய் சாம்பார் ஜிபி முத்து கேட்டிருந்தார்). தொடர்ந்து ஜிபி முத்துவுக்கு லெட்டர் ஒன்று வந்திருந்தது. அதில் தலைவரே எந்த 2 கதாநாயகியுடன் நீங்கள் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு ஜிபி முத்து நயன்தாரா, சிம்ரன் பெயரை சொல்கிறார். இதைக்கேட்ட கமல் எனக்கே வெளில வந்தா வேட்டு வைப்பிங்க போலயே என சொல்கிறார். பின் வீட்டுக்குள் இருக்கும் இருவரில் யாரை ஹீரோயினாக தேர்வு செய்வீங்க என கமல் கேட்க, ஜிபி முத்து திருதிருவென முழிக்கிறார். 

Continues below advertisement