இன்று வந்த மூன்று ப்ரோமோக்களிலும் தனலட்சுமியின் பெயர் அடிக்கடி அடிப்பட்டது. இப்படி பேசுபொருளாகவே உள்ள தனலட்சுமியை என்ன செய்தார் என்பதை பார்போம்.


நந்தினி இந்த வாரத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார். அதன் பின், அனைவரையும் ஒரு இடத்தில் கூடுகின்றனர். ஆனால், தனலட்சுமி மட்டும் உறங்கும் அறையில் உள்ள கட்டிலை விட்டு நகரவில்லை. மற்ற போட்டியாளர்கள் அவரை அழைக்க, கேப்டன்சி டாஸ்க்கை மனதில் வைத்து பேசிய தனம் “நான் யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படி பால்  மேல போச்சு” என்று கோபத்தில் சத்தம் போட, ரச்சித்தா மேல போகல என்று கூறியதற்கு, “நீங்க தயவு செஞ்சு போறீங்களா” என்று பதில் கூறுகிறார். 


இதில் இருந்து கேப்டன்சி டாஸ்க்கில் ஏதோ நடந்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது. அங்கு தன் சண்டையை துவங்கிய தனம், இரண்டாவது ப்ரோமோவிலும் பஞ்சாயத்தை தொடரும் வகையில், மைனாவிடம் கோபித்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு வாரமும், கேப்டன் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அனைவரும் சமையல் அணி, பாத்திரம் கழுவும் அணி, பாத்ரூம் அணி, சுத்தம் செய்யும் அணி ஆகிய நான்கு அணிகளாக பிரிக்கப்படுவர்.






அந்தவகையில், மைனா நந்தினி மற்ற போட்டியாளர்களை நான்கு அணிகளாக பிரிக்கிறார். அதில், ரச்சித்தா மற்றும் ஷிவினை கிச்சன் அணியில் சேர்க்கிறார். முகத்தை உர்ரென்று வைத்து கொண்ட தனம், “ ரச்சித்தா மற்றும் ஷிவினை நீங்கள் காலையிலே பிரிச்சுடீங்கள..” என்று சொன்னார். அப்போது மைனா நந்தினி அவரை கண்டுக்கொள்ளவில்லை. அவ்வளவுதான்..தனலட்சுமிக்கு டென்ஷன் தலைக்கேரியது. அங்கிருந்து சர சர வென்று நடையை கட்டினார் தனலட்சுமி.






அதற்கு பின்னர், இரண்டாவது ப்ரோமோவில் பார்த்த காட்சிகள் நடந்துள்ளது என்பது தெரிகிறது. அந்த ப்ரோமோவில், ஜனனி, தனம், ஷிவின், ஆயிஷா மற்றும் நந்தினி ஆகியோர் உள்ளனர். சமையல் அணியில் ஆட்களை பிரிக்கும் போது, சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. கேப்டன்சி டாஸ்க்கில் கடுப்பான தனம் இந்த விஷயத்திலும் கடுப்பாகி, “ஏன் கிட்ட பேசாத” என்று ஷிவினிடம் சொல்கின்ற காட்சி இடம்பெற்றது.