இன்றைய ப்ரோமோவை பார்க்குபோது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்று தெரிகிறது.



நேற்றைய நிகழ்ச்சியில், கமலின் பஞ்சாயத்து முடிந்த பின், குறைந்த வாக்குகளை பெற்ற நிவாஷினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து, இன்றைய ப்ரோமோவில் புதிய வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கிற்கு தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.






முதல் ப்ரோமோவில், நந்தினி இந்த வாரத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார். அதன் பின், அனைவரையும் ஒரு இடத்தில் கூடுகின்றனர். ஆனால், தனலட்சுமி மட்டும் உறங்கும் அறையில் உள்ள கட்டிலை விட்டு நகரவில்லை. மற்ற போட்டியாளர்கள் அவரை அழைக்க, “நான் யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படி மேல போச்சு” என்று கோபத்தில் சத்தம் போட, ரச்சித்தா மேல போகல என்று கூறியதற்கு, “நீங்க தயவு செஞ்சு போறீங்களா” என்று பதில் கூறுகிறார். 






இதை பார்க்கும் போது, கேப்டன்சி டாஸ்க்கில் ஏதோ நடந்துள்ளது என்று தெரிகிறது. அதனை ஏற்றுக்கொள்ளாத தனம் மற்றவர்களுடன் சண்டை போட்டு வருகிறார். அடுத்து வந்த இரண்டாவது ப்ரோமோவில், ஜனனி, தனம், ஷிவின், ஆயிஷா மற்றும் நந்தினி ஆகியோர் உள்ளனர். சமையல் அணியில் ஆட்களை பிரிக்கும் போது, சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. கேப்டன்சி டாஸ்க்கில் கடுப்பான தனம், இந்த விஷயத்திலும் கடுப்பாகி, “ஏன் கிட்ட பேசாத” என்று ஷிவினிடம் சொல்கிறார்.


முதலில் எப்போதும் கடுப்பாக இருந்த தனம் இடையில் சைலண்டாக மாறினார். பின்னர், அசிமுடன் பயங்கரமாக
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸையும் திட்டி தீர்த்தார். பிறகு மன்னிப்பு கேட்டார்.
தற்போது மீண்டும் அன்னியன் விக்ரம் போன்ற நடவடிக்கையை தொடர்ந்துள்ளார்.






இறுதியாக வந்த ப்ரோமோவில், இந்த பிக்பாஸ் சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் எல்லோரும், அனைவரின் முன்பாக எவிக்‌ஷன் நாமினீஸ்களை தேர்வு செய்கின்றன காட்சி இடம்பெற்றுள்ளது. பெரும்பாலோனோர், அசிம் மற்றும் தனலட்சுமியை நாமினேட் செய்கின்றனர்.