சனி ஞாயிறு பஞ்சாயத்து முடிந்து, புது வாரம் ஒரு விதமாகதான் துவங்கியுள்ளது. இன்றைய நாளுக்கான மூன்று ப்ரோமோக்கள் வெளியான நிலையில், அனைத்து ப்ரோமோக்களின் தொகுப்பை இங்கு காண்போம்.






முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களை தேர்வு செய்ய பிக்பாஸ் அறிவிக்கிறார். அதையடுத்து, அனைத்து போட்டியாளர்களும் காரணத்துடன் ஒவ்வொருவரை தேர்வு செய்கின்றனர். இந்த வாரம், ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, ஆயிஷா,ஜனனி, அசிம், தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.






இரண்டாவது ப்ரோமோவில், மைனா நந்தினி மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் சேர்ந்து அசிமின் நடவடிக்கைகள் குறித்து பேசிவருகின்றனர். அதில்,  “ டக்குனு யாராலையும் மாத்திக்க முடியாது. அனைத்து சனிக்கிழமை பிறகு மாறிவிடுகிறார். காரணத்தோடு இருக்கும் குற்றவாளி அவர் ஒருத்தர்தான். இந்த வாரம் பார்ப்போம், அவர் எப்படி விளையாடுகின்றார் என்று.” என அசிமை கேலி செய்து பேசினர்.






இறுதியாக வந்த மூன்றாவது ப்ரோமோவில், தனலட்சுமி அழுது புலம்புகிறார். “கனவோடு வந்தேன். ஆனால் நானே இங்கு என்னை வந்து அசிங்கபடுத்தி கொண்டேன். வெளியே சொல்லவதற்கு அவமானமாக இருக்கிறது. ஒரு சின்ன விஷயம் இவ்வளவு பெரிதாக வெடிக்கும் என்று நினைக்கவில்லை. நியாயமாக விளையாடி வருகிறேன் என்றுதான் நான் நினைத்தேன். அமைதியாக இருக்க எனக்கு வராது. அவ்வளவு கஷ்டப்பட்டு நான் இங்கு வந்துள்ளேன். ஏதோ திருடியது போல் இருக்கிறது... நான் திருடவில்லை...” என்று தனலட்சுமி பேசியுள்ளார்.


பிக் பாஸ் போட்டியாளர்கள் :




இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 16  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 






இதற்கிடையில் இந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டன் பொறுப்பிற்கான போட்டியில், விக்ரமன், ரச்சிதா, அமுதவாணன் ஆகியோரை மேடையில் இருந்து தள்ளிவிட்டு, மீண்டும் புதிய கேப்டனாக இரண்டாவது முறை பொறுப்பேற்றார் மணிகண்டா.