பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டை போட்டு பேசுபொருளாக மாறிய தனலட்சுமியின் அம்மா, இன்ஸ்டாகிராம் லைவில் அவரது பெண் குறித்த பல விஷயங்களை பேசியுள்ளார்.


தனலட்சுமி இந்த சீசனில் கலந்து கொண்ட முதல் நாளில் இருந்தே மற்றவர்களிடம் சண்டை போட்டு கொண்டும்
முகம் சுழித்து கொண்டும் இருந்தார். அதற்கு ஏற்றவாரு தனலட்சுமி பற்றி எப்போதும் நெகடீவான விஷயங்களே சுழன்று கொண்டு இருந்தது. பற்றாத குறைக்கு, தனலட்சுமியின் பழைய டிக்டாக் நண்பர்கள் சிலர், அவர் மீதுள்ள வன்மத்தை கக்கும் வகையில், ப்ரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தனர்.






இதெல்லாம் தவறு என்று நிரூபிக்கும் வகையில், தனலட்சுமியின் அம்மா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் உள்ள லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அதில் பேச துவங்கிய அவர், “ வீட்டில் எப்படி இருக்கிறாரோ அப்படிதான் அங்கும் உள்ளார். கொஞ்சம் கூட மாற்றமே கிடையாது. அவருக்கு நடிக்க தெரியவில்லை அதான் பிரச்னையே. நடிச்சா நல்ல பேரு வரும் என்ற எண்ணம் அவரிடம் கிடையாது. கோவம் வந்தால் அப்போதே அதை வெளிபடுத்திவிடுவார். அந்த கோவம் அரைமணிநேரத்திலோ, கால்மணிநேரத்திலோ மாறிவிடும். அவள் Attitude- யெல்லாம் காட்டவில்லை. அவரது குணமே அப்படித்தான், கோவத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை.


பிடித்தவர்களிடம் உரிமையாக சண்டை போடுவார், அவர்கள் ஏதாவது பேசினால் திரும்ப திரும்ப பேசுவார். அந்த பழக்கம் கூடிய விரைவில் இவர் மாறிவிடுவார் என்று நம்புகின்றோம். கெட்ட எண்ணமோ, கெட்ட பழக்கமோ அவருக்கு கிடையாது. மற்ற யூடியூப் சேனல்களில் என் மகளை பற்றி தவறாக பேசிவருகிறார்கள். அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று எனக்கு தெரியும்.தனலட்சுமி பிக்பாஸை விட்டு வெளியே வந்துவிட்டால், கஷ்டப்படுவார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி கிடையாது..என் மகளை பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன்.


சிகரெட் அடிப்பது போல், தனலட்சுமி டிக்டாக் செய்து போட்டார். நல்ல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தோம், அதனால் பல ஃபாலோவர்ஸ்களை இழந்தோம். சிகரெட் அடிப்பது போன்றும், பணத்தை எரிப்பது போன்றும், முட்டையை உடைப்பது போன்ற வீடியோக்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனால் அதை அவர் செய்தார்.” என்று விளக்கமளித்தார் தனத்தின் அம்மா. தனலட்சுமியின் அம்மா பேசிய இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது என்பது குறிப்பிடதக்கது.


இதற்கு முன்னதாக, ” தனலட்சுமி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று தெரிந்த உடன் அந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்பதை நிறுத்திவிட்டோம். அவர் மற்றவர்களிடம் எரிந்து எரிந்து விழுவார். மற்றவர்களிடம் குறை காண்பார். அவர் மீதுள்ள தவரை உணரமாட்டார். தலைகணம் பிடித்தவர்.” என்று அவரது டிக்டாக் நண்பர்கள் பேட்டி கொடுத்து இருந்தனர்.


மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ஒரே ஒரு குறும்படம்... ஒட்டுமொத்த நரிகளையும் நாறடித்த கமல்... குவியும் கைதட்டல்கள்!