பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து நடிகை மைனா நந்தினி வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முடிவுக்கு வரும் பிக்பாஸ் 


கடந்தாண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன்  ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர்.






பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரீயாக மைனா நந்தினி உள்ளே வர ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாகவே சென்றது. இதனிடையே 100 நாட்களை கடந்த நிலையில் வரும் ஜனவரி 22 ஆம் தேதியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறது. 






இறுதி வார போட்டியாளர்கள் 


இதனிடையே இறுதி வார போட்டியாளர்களாக விக்ரமன், அஸிம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி, விஜே கதிரவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து  பணப்பெட்டி டாஸ்க்கை கொண்டு வந்து ஒருவரை வெளியேற்ற பிக்பாஸ் திட்டமிட்டார். அதன்படி ரூ.3 லட்சம் பணத்துடன் பண மூட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இதனை எடுத்துக் கொண்டு  விஜே கதிரவன் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.  இதனையடுத்து ரூ.13 லட்சம் பணத்துடன் அமுதவாணனும் வெளியேற தற்போது விக்ரமன், அஸிம், ஷிவின், மைனா நந்தினி ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். 


மைனா வெளியேற்றம் 


இந்நிலையில் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ட்விஸ்ட் தரும் விதமாக முதல் மிட் நைட் எவிக்‌ஷன் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பெரிய திரைக்கு பின்னால் அமைக்கப்பட்டிருந்த லிஃப்டில் ஒவ்வொருவராக ஏற வேண்டும். லிஃப்ட் மேலே கீழே சென்று வரும் இறுதியாக மேலே வருபவர் இறுதிப்போட்டிக்கும், லிஃப்டில் மேலே வராதவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து மைனா நந்தினி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.