பிக்பாஸ் வீட்டினுள் ஓவர் எமோஷனல் ஆகும் ஆயுஷா  ‘ஐ எம் சாரி’ என்று கத்துகிறார். 


விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ்  என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர்.


கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் 


அதனைத்தொடர்ந்து தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 


ஓவர் எமோஷனல் ஆயுஷா 


நிகழ்ச்சி தொடங்கி மூன்று நாட்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் ஆயுஷா தொடர்ந்து ஓவராக எமோஷனல் ஆவது பிக்பாஸ் வீட்டில் அனலை பரப்பி வருகிறது. ஆம், நேற்றைய நிகழ்ச்சியில் கூட  அசலை  ‘வாடா போடா’ என்று கூப்பிட்டதற்காக ஆயுஷாவை அவர் கடிந்து கொள்ள அஸிம், கதிரவன், அசல் ஒன்று கூடி பஞ்சயாத்து செய்தனர்.


அந்த பஞ்சாயத்திலும் ஓவர் எமோஷனல் ஆன ஆயுஷா கடைசியில் அழுதே விட்டார். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் பிரோமோவிலும் ஆயுஷா அதிகமாக எமோஷன்ல் ஆகி இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் பிரோமோவில்,


“ ஜனனி ஆயுஷாவுடன் சண்டை வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும்... போச்சுடா என்று தலையில் கை வைத்த படி  அப்செட் ஆகிறார் ஆயுஷா. தொடர்ந்து  நான் அப்படி நினைக்கல என்று வெகுண்டெழுந்த அவர், என்னோட டாக்கிங் ஸ்டைலே தப்பாக இருக்கு என்று நான் எல்லாத்துக்கும் விளக்கம் கொடுத்துட்டு இருக்கேன் என்று சொந்து கள்ள, குறுக்கே வந்த மகேஷ்வரி... உங்க ஸ்டைல் எங்களுக்கு தப்பா தெரியல.. என்று கூற, ஏங்க என்னோட  கடமைக்கு நான் சொல்றேங்க... என்று கெஞ்சுகிறார். 


 






அப்படியும் பாவம் பாக்காத மகேஷ்... நாலாவது வாட்டிப்பா... என்று இழுக்க.... ஐ அம் சாரி.. நான் எல்லாத்தையும் ஏத்துக்கிறேன் என்று கத்துகிறார். இந்த பிரோமோவை பார்க்கும் போது, நிச்சயம் இன்றும் களேபரங்கள் அரங்கேறும் என்பது தெளிவாக தெரிகிறது.