பிக்பாஸ் வீட்டில் அமுதவாணன் இரவில் உறங்காமல் கோஸ்ட் ப்ராங்க் செய்து தனலட்சுமியை அழுகவைத்து வீட்டை விட்டு செல்லும் அளவிற்கு அலர வைத்துள்ளார்.


பெரும்பாலாக, காலையில் டான்ஸ் உடன் அவர்களின் நாளை துவங்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் பகல் நேரத்தில் அனைத்து டாஸ்க்கையும் செய்து முடித்துவிடுவர். இவர்களுக்கு இரவில் எந்தவொரு டாஸ்க்கையும் பிக்பாஸ் கொடுக்காவிட்டாலும், உறக்கம் வராத இவர்கள் எதையாவது  அவர்களே அவர்களுக்குள் எண்டர்டெயின்மண்ட் செய்து வருவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.










அந்தவகையில், போட்டியாளர் அமுதவாணன் பேய் போல் நடித்து கோஸ்ட் ப்ராங் செய்கிறார். முதலில், நின்று கொண்டு இருந்த அமுதவாணன் மயக்கம் அடித்து விழ, அனைவரும் சிரித்து சூப்பர் அமுது சூப்பர் அமுது என புகழ்ந்தனர். பிறகு, பாத் ரூம் உள்ளே சென்ற அவருக்காக, சில போட்டியாளர்கள் வெளியே காத்துக்கொண்டு இருக்கின்றனர். 






முதலில் எல்லோரும், சிரித்து கொண்டுதான் இருந்தனர். பின், நேரம் ஆக ஆக, தனலட்சுமி பயந்து, கேமராமுன் சென்று, எனக்கு பயமாக இருக்கு என சொன்னார். பிறகு மகேஸ்வரி மற்றும் ஷிவின் அவரை தைரியப்படுத்தினர். பாத் ரூம்மில் இருந்து வெளியே வந்த அமுதவாணனை, ஷிவின் சைகையாலேயே அனுப்பிவிட்டார்.


பகல் வேலையில், அவரின் பார்வையால் அனைவரையும் நடுங்கவைக்கும் தனலட்சுமியே, இன்று அமுதவாணனின் செயலால் அலறியடுத்து ஓடுவதை பார்த்தால் சற்று ஆச்சர்யமாகதான் உள்ளது.


பிக் பாஸ் போட்டியாளர்கள் : 


போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.


மேலும் படிக்க : ‛அச்சம் என்பது இல்லயே’ செட்டில் ஏற்பட்ட சோகம்... காயத்தில் வாடும் அருண் விஜய்!