இன்றைய பிக்பாஸ் சீசன் 5 ப்ரொமோவே என்ன நடக்கப் போகிறது என்பதை கிட்டத்தட்ட கூறிவிட்டது. அடி தடி, ரகளை தான்.
புதிய தலைவராக தேர்வான இசைவாணி, காயின் மூலம் தலைவர் ஆனதால் அதற்காக பிக்பாஸ் வழங்கிய தண்டனை குறித்து போட்டியாளர்களிடம் பேசினார். யாருக்கு என்ன உணவு வேண்டினாலும் மணி அடித்தால் வந்து உதவி செய்வேன் என அறிவித்தார். அதன் பின்பாக பிக் பாஸ் டாஸ்க் இமான் அண்ணாச்சி மூலம் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இது ஒரு நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க். மற்றொருவரின் வெற்றிக்காக போட்டியாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதே இந்த டாஸ்க். அவரவர் பெயர் போட்ட பொம்மை வெளியில் வைக்கப்பட்டிருக்கும், தனது பெயர் போடாத பொம்மையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள குடிலில் வைக்க வேண்டும். கடைசியாக வரும் பொம்மையில் பெயர் உள்ளவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவர்.
மூன்றாவது சுற்றில், வருண்-நிரூப் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடைசியில் இருவரும் உள்ளே செல்லாமல் வெளியிலேயே ஒருவரை ஒருவர் வெளியேற காத்திருந்தனர். இதனால் போட்டியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் கடுமையாக வசை பாடி கொண்டனர். இதற்கிடையில் பஞ்சாயத்து செய்ய உள்ளே வந்த சிபி, கடந்த வார டாஸ்க் குறித்து பேசும்போது சில வார்த்தைகளை கூறியதாக கூறி அக்ஷரா கடுமையாக சிபியை எச்சரித்தார். வருண்-நிரூப் பிரச்சினை இப்போது அக்ஷரா-சிபி பிரச்சினையாக மாறியது. விதிகள் மீறப்பட்டதாக அந்த சுற்றி பிக் பாஸ் ரத்து செய்தார். இனி அவரவர் பெயரில் உள்ள பொம்மையை எடுத்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
பூவுக்கு பிறந்தநாளோ பாடல் போட்டு பாவனிக்கு பிக்பாஸ் வாழ்த்துக் கூறினார். இந்த அனைவர் முன்னிலையிலும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் பாவனி. அடிதடியில் தொடங்கி இறுதியில் பாவனி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முடிந்தது இன்றைய பிக் பாஸ். இன்னும் 9 சுற்றுகள் இருக்கிறது. நாளையும் வெடிக்கும்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்