Big Boss 7 Tamil Archana: பிக்பாஸ் வீட்டில் மாயா அண்ட் கோ-வை தனி ஆளாய் நின்று சமாளித்த அர்ச்சனா பிக்பாஸ் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார். 


பிக் பாஸ்:


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீசனில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இரு பிக்பாஸ் வீடுகள், போட்டியாளர்களுக்கு வித்யாசமான டாஸ்குகள், 5 வைல்டு கார்டு என்ட்ரி என பிக்பாஸ் போட்டி முற்றிலுமாக மாறியுள்ளது. கடந்த வார சீசனில் பிரதீப் ஆண்டனி வெளியேறியதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் சண்டைகளும், சர்ச்சைகளும் வெடித்தன. விசித்ரா மற்றும் மாயா அணி இரு பிரிவாக இருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


இதில் பிரதீப்க்கு ஆதரவு தெரிவித்த விசித்ராவுக்கு எதிராக மாயா, ஜோவிகா, பூர்ணிமா, ஐஷூ உள்ளிட்டோர் ஒன்றிணைந்து கட்டம் கட்டினர். ஸ்மால் பாக்ஸ் ஹவுசில் அர்ச்சனா சமைக்கும்போது மாயா கேப்டன்ஷிப் அதிகாரை காட்டி பழிவாங்கினர். அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் வாரத்தில் அழுது கொண்டே இருந்ததால், அதை வைத்து ஐஷூ கிண்டலடிக்க தொடங்கினார். அர்ச்சனாவின் உணர்வை டார்கெட் செய்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடினர். அர்ச்சனாவிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஜோவிகா டி போட்டு அழைத்து வம்பிழுத்தார். 


3.5 லட்சம் வாக்குகள்:


இவ்வளவு பிரச்சனைகளுக்கும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக விசித்ரா கூட இருந்தார். அர்ச்சனாவுக்காக மாயா அண்ட் கோ-வை எதிர்த்து விசித்ரா களமிறங்கினர். கடந்த வாரம்  முழுவதும் பெண் போட்டியாளர்களின் சண்டையிலேயே பிக்பாஸ் எபிசோடுகள் சென்றன. இந்த நிலையில், அர்ச்சனா எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் வாக்குகள் பெற்றதாக கூறப்படுகிறது. நாமினேஷனில் செலக்டான அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் 3.5 லட்சம் ஓட்டுகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 






பிக்பாஸ் வரலாற்றிலே முதன்முறை:


பிக்பாஸ் தொடங்கியதில் இருந்தே பிரதீப்க்கு மக்களிடையே ஆதரவு இருந்து வருகிறது. பெண் போட்டியாளர்கள் திட்டமிட்டு பிரதீப்பை வெளியேற்றியதாக கூறி அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. இந்த சூழலில் பிரதீப்க்கு ஆதரவாக பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா பேசியது, அவருக்கான பேன்பேஸ் உருவாகியுள்ளது. மாயா கேப்டன் ஷிப் அதிகாரத்தை பார்த்து கடுப்பாகி இருந்த ரசிகர்கள், மாயாவை எதிர்த்து நின்றிருந்த அர்ச்சனாவை வரவேற்க தொடங்கினர். முதல் சீசனில் பங்கேற்ற ஓவியாவுக்கு பிறகு பிக் பாஸ் வரலாற்றிலேயே ஒரு போட்டியாளர் பெற்ற அதிகப்படியான வாக்குகள் பெற்றது இதுவே முதல் முறை என்ற தகவல்கள் வருகின்றன.

இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் அதிகப்படியான வாக்குகளை அர்ச்சனா பெற்றதை அடுத்து அதற்கு அடுத்தபடியாக விசித்ரா மற்றும் தினேஷ் இருக்கின்றனர். மேலும் குறைவான வாக்குகளை பூர்ணிமா மற்றும் ஐஷு பெற்றுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஷூ வெளியேறுவார் என கூறப்படுகிறது.