பாரதியும் கண்ணம்மாவும் ஒரே நேரத்தில் பாரதியின் வீட்டிற்கு குழந்தைகளைப்பார்க்க  சென்ற ப்ரோமா தான் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அனைத்துச் சீரியல்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதிலும் பாரதி கண்ணம்மாவிற்குத் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி பெண்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடித்தமானவராக இருந்து வந்தார். இதனாலேயே டாப் 5 சீரியல் லிஸ்டில் இருந்து வந்தது பாரதி கண்ணம்மா. ஆனால் என்ன சில காரணங்களுக்காக நடிகை ரோஷினி சீரியலில் இருந்து விலகிய நிலையில் தான் அதற்கு பதிலாக நடிகை வினிஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இருந்தப்போதும் பழைய கண்ணம்மாவை அவரால் பீட் டிசய்ய முடியவில்லை என ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் தான் டாப் 5 சீரியல் லிஸ்டில்  இருந்து சீரியல் இறங்கியுள்ளது.



ஆனால் கடந்த சில வாரங்களாக சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருப்பதால் புதிய கண்ணம்மாவையும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக பாரதி கண்ணம்மாவை விவகாரத்து செய்ய  நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்கிறார். இவர்கள் பிரிந்துவிடுவார்களா? அல்லது சேர்ந்து வாழ்வார்களா? என என்ன நடக்கப்போகிறது என எதிர்ப்பார்த்திருந்த சூழலில் தான் இருவரையும் இணைந்து சில மாதங்களுக்கு வாழ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கண்ணம்மா வீட்டில் பாரதி வாழ்ந்துவரும் நிலையில் தான் இவர்களின் இரு குழந்தைகளும் தற்போது பாரதி வீட்டில் சௌந்தர்யாவிடம் உள்ளனர்.



இந்த வாரம் சேர்ந்துவிடுகிறார்களா? அல்லது அடுத்த வாரமாவது நடக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் ப்ரோமக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் தான், பாரதி கண்ணம்மாவின் இந்த வார ப்ரோமோ வைரலாகிவருகிறது. இதில் கண்ணம்மாவின் வீட்டில் பாரதியும், கண்ணம்மாவும், கண்ணம்மாவில் தனித்தனியே தூங்கிக்கொண்டிருக்கும் போது பாரதிக்கு கனவு வந்து சட்டென்று எழுகிறார். ஹேமாவிற்கு என்ன ஆச்சு என தெரிந்துக்கொள்ள பாரதி வீட்டிற்கு புறப்படுகிறார். அதேபோன்று கண்ணம்மாவும் மகள் லக்சுமி பற்றி கனவுக்கண்டு அலறி எழுகிறார்.


உடனடியாக அவரும் லக்சுமியைப்பார்க்க பாரதி வீட்டிற்கு நடுராத்திரியில் செல்கிறார். அங்கே கண்ணம்மாவைப்பார்த்த பாரதி, ஏன் இங்கே வந்திருக்கிறாய், எனக்கேட்க நானும் நீங்கள் வந்த காரணத்திற்காகத் தான் வந்திருக்கிறேன் என தெரிவித்து இருவரும் குழந்தைகளுக்கு முத்தமிடுகிறார்கள்.


பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கும் சௌந்தர்யா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். பாரதியும் கண்ணம்மாவும் நடு ராத்திரியில் ஒரே நேரத்தில் பாரதியின் வீட்டுக்கு தங்களது குழந்தைகளைப் பார்க்கவேண்டும் என்ற  ஒரே நோக்கத்துடன் சென்றுள்ள இந்த வார ப்ரோமோ  தான் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் பல்லேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதோடு இதுபோன்ற காட்சிகளையெல்லாம் பார்க்கும் போது விரைவில் கண்ணம்மா சீரியில் இறுதிக்கட்டத்தை அடைந்துவிடுமோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.