சின்னத்திரையில் வெளியாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். சீரியலில் இடம்பெறும் சுவாரஸ்ய கதைக்காக தொடரை பார்ப்பவர்கள் ஒரு புறம் இருந்தால் , மீம் கிரியேட்டர்கள் டெம்ப்லேட்டிற்காக ஒரு புறம் சீரியலை பார்த்து வருகின்றனர். எது அப்படியோ சீரியல் ஹிட் அது போது என்கின்றனர் பாரதி கண்ணம்மா குழுவினர். இந்த தொடரில் நாயகியாக ரோஷினி நடித்து வருகிறார். ட்ஸ்கி ஸ்கின் டோலில் இருக்கும் ரோஷ்னி, சீரியலில் அறிமுகமான ஆரம்ப காலக்கட்டத்தில் கேளிக்குள்ளானதாகவும் பிறகு அது அங்கீகாரமாக மாறியதாகவும் விருது வழங்கும் விழாஅ ஒன்றில் பகிர்ந்திருந்தார். அவருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து வெளியேற போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.ரோஷினிக்கு சில சொந்த காரணங்கள் உள்ளதாகவும் அதனாலேயே சீரியிலில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு நெருக்கமான சிலர் அவருக்கு பிரபல நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதனால் பாரதி கண்ணம்மா நாயகி தற்போது வெள்ளித்திரையை நோக்கி படையெடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றன.






இந்நிலையில் அவருக்கு மாற்றாக சீரியல் குழுவினர் வினுஷா தேவி என்பவரை தேர்வு செய்துள்ளனர். வினுஷா மாடலிங் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் N4 என்னும் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். டிக்டாக் செயலி மூலமாக பிரபலமடைந்தவர்  வினுஷா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரும் கிட்டத்தட்ட ரோஷினி ஜாடையில்தான் இருக்கிறார். ட்ஸ்கி ஸ்கின்னாக இருப்பது கூடுதல் பிளஸ்.  புதிய தொடரில் ஒப்பந்தமாகி , நடிப்பை வெளிப்படுத்துவதை விட வேறு ஒருவர் நடித்த பிரபலமான கதாபாத்திரத்தை ஈடு செய்வது என்பது வினுஷாவிற்கு சற்று சவாலான விஷயம்தான். தற்போது ரோஷினி (கண்ணம்மா) தனக்கு ஒதுக்கப்பட்ட ஷெடியூலில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த வார இறுதியில் தனக்கான காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டு சீரியலிருந்து விடைப்பெறவுள்ளாராம். அதன் பிறகு வினுஷா இணையவார் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.





விரைவில்  அப்டேட்டை எதிர்பார்க்கலாம். ரோஷினிக்கு தற்போது பட்டி தொட்டியெங்கும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். அந்த  இடத்தை வினுஷா பெறுவாரா அல்லது தனக்கென தனி ரசிகர்களை உருவாக்குவாரா என்பதையெல்லாம் பொருத்திருந்து பார்க்கலாம்.