• திருடனால் ஏற்பட்ட கத்திக்குத்தினால் கண்ணம்மாவை மருத்துவமனைக்குத் தூக்கி வந்து சிகிச்சை அளிக்கும் பாரதி. என்ன பாரதி இப்படி பண்ணிடீயே என வெறுப்பாகும் வெண்பா.


விஜய்டிவியின் ப்ரைம் டைம் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. கருப்பாக இருக்கும் பெண் சந்திக்கும் பிரச்சனைகள், சித்தி கொடுமைகள் என ஏதார்த்த கதைக்களத்துடன் தொடங்கும் இச்சீரியலில் டிவிட்ஸாக அமைந்துள்ளது தான் பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்வது. மாமியார் சௌந்தர்யாவின் கொடுமையை அனுபவித்தாலும், பாரதியை விட்டு பிரியாமல் வாழ்ந்து வந்தார் கண்ணம்மா. ஆனால் தனக்கு குழந்தையே பிறக்காது என எண்ணிக்கொண்டிருந்த நிலையில் தீடிரென கண்ணம்மா கர்ப்பமாவது போல் கதைக்களம் நகர்ந்தப்போது மிகவும் சுவாரஸ்சியமாக அமைந்தது.





மேலும் தன்னை காதல் கணவன் பாரதி சந்தேகப்பட்டுவிட்டானே என்று ஆத்திரத்தில், வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா, சென்னை முழுவதும் நடப்பது போன்று காட்சிகள் அனைத்தும் டிஆர்பியை ஏற்றிக்கொடுத்தது. இதனையடுத்து இரண்டு குழந்தைகளை கண்ணம்மா பெற்றிருந்தாலும், கண்ணம்மாவிடம் ஒரு குழந்தையும், பாரதியும் ஒரு குழந்தையும் வளர்கிறது. ஒரு காலக்கட்டத்தில் பாரதியிடம் வளரும் ஹேமா தனக்கு பிறந்த குழந்தை என்பதை அறிந்தும் மாமியார் சௌந்தர்யாவிடம் கோபம் அடைந்தாலும் பாசத்தில் உருகிறார் கண்ணம்மா.


மேலும் லட்சுமி யார் அப்பா? என அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த நிலையில் நான் என்னுடைய பிறந்த நாளில் சொல்கிறேன் என கண்ணம்மா சொல்வது போன்ற ப்ரோமா வந்தப்போது சீரியல் என்டிங்க்கு வரப்போகிறது என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அப்போதும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். கடந்த சில மாதங்களாக சீரியல் முடிவதுப்போல கதைக்களம் அமைந்தாலும் இன்னமும் என்ட் கார்டு போடவில்லை என ரசிகர்கள் வெறுப்பாகிவருகின்றனர்.  மேலும் வழக்கம் போல வெண்பாவின் பேச்சைக்கேட்டு கண்ணம்மாவே வேண்டாம் என்று கூறிவருகிறார் பாரதி


இந்நிலையில் தான் பாரதியின் மொபைல் போனை திருடிய திருடனை துரத்திக்கொண்டு ஓடிய கண்ணம்மாவுக்கு கத்திக்குத்து விழந்துவிட்டது. பின்னர் கண்ணம்மாவை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு செல்லும் பாரதி அவளுக்கு தையல் போடுகிறான். இதனை வெளியில் இருந்து பார்க்கும் வெண்பா, ஏன் பாரதி கண்ணம்மா இல்லாம வாழ்ந்திருவேன்னு சொன்ன .. இப்படி பண்றேய என்கிறார். அப்போது தன்னைத்தூக்கி வந்து உதவிய பாரதியை ஏக்கத்துடன் பார்க்கிறார் கண்ணம்மா பார்ப்பது  போல இந்தவார ப்ரோமா முடிவடைகிறது.


 



மேலும் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், ஏன் இயக்குநர் சார் இப்படி இழுவையாக இழுக்குறீங்க? அதற்குப்பதிலாக சீரியலை முடித்துவிட்டு செல்லலாமே என்றும், 3 வது உலகப்போரை முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர். மேலும் சிலர் என்னதான் சீரியல்ல என்ன நடந்தாலும் உங்களுக்கு என்ன? நீங்க பார்க்கிறது நிறுத்த வேண்டிதானே என்றும் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.