பாக்கியலட்சுமி சீரியல் மகள் பாசத்தில் கோபி இனியாவை நினைத்து உருகும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள்.  இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


கதறி அழுத இனியா


பள்ளிக்கு பேரன்ஸ் டீச்சர் மீட்டிங் என பாக்யாவுடன் இனியா வர, கோபி ராதிகா மற்றும் மயூவுடன் வந்திறங்குகிறார். அங்கு இருக்கும் இனியாவுடன் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் என்னவென்று விசாரிக்கிறார்கள். ஆனால் அவர்களை சமாளித்து அழைத்து செல்லும் பாக்யா டீச்சரை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது டீச்சர் இனியா அப்பா வரலையா என கேட்க, பாக்யா இல்லை என பதிலளிக்கிறார். அந்த பக்கம் ராதிகா மற்றும் மயூவுடன் வந்த கோபியிடம் நீங்கள் யார் என அவளின் டீச்சர் கேட்கிறார். அதற்கு ராதிகா மயூவின் அப்பா என பதிலளிக்கிறார். 


இதன் பின்னர் மீட்டிங் முடிந்து வெளியே வரும் கோபி ராதிகாவிடம் இனியாவை போய் பார்த்து வருவதாக சொல்கிறார். முதலில் டென்ஷனாகும் ராதிகா, கோபியின் பரிதவிப்பை பார்த்து எதுவும் சொல்லாமல் இருக்கிறார். அதற்குள் இனியா வெளியே வர கோபி அவளை அழைக்கிறார். நான் வந்து டீச்சரை பார்க்கட்டுமா என கோபி கேட்க அதான் அம்மா பாத்துட்டாங்களே. நீங்க ஒன்னும் வர தேவையில்லை என மூஞ்சில் அடித்த மாதிரி பேசுகிறார். 


உடனே பாக்யா, இப்ப எதுக்கு டிராமா போடுறீங்க. இனியா ப்ரண்ட்ஸ்லாம் பாக்குறாங்க. அப்புறம் அவதான் கஷ்டப்படுவா என சொல்கிறார். அந்நேரம் பார்க்க மயூ வந்து டாடி வாங்க போலாம் என கூப்பிடுகிறார். இனியாவுடன் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் கோபி வேற கல்யாணம் பண்ணிகிட்டாரா என விசாரிக்க, அதை அவர்கிட்டயே கேளுங்க. என பாக்யா சொல்லிவிட்டு கிளம்புகிறார். பார்க்கிங்கில் சென்று வண்டி எடுக்கும்  போது இனியா பாக்யாவிடம் அப்பா ஏன் இப்படி பண்றாரு. நான் இருப்பேன்னு தெரிஞ்சே இங்க வந்துருக்காரு என சொல்லி அழுகிறார். 


ராதிகாவிடம் வாங்கி கட்டிய கோபி 


வெளியில் வந்ததும் மயூ கோபியிடம் நீங்க எனக்கு யாரு என கேட்க, டாடி என பதிலளிக்கிறார். அப்படின்னா இனியா அக்காவுக்கு நீங்க டாடின்னா என்ன அர்த்தம் என அடுக்கடுக்கான கேள்விகளைப் பார்த்து கோபி அதிர்ச்சியடைகிறார். அப்ப இனியாவுக்கு டாடி, இப்ப உனக்கு டாடி என சொல்கிறார். பின்னே எதுக்கு இனியா அக்காவும், பாக்யா ஆன்ட்டியும் கோபமா இருக்காங்க என மயூ கேட்க, சீக்கிரமே இனியா உங்கிட்ட பேசுவா என சமாளிக்கிறார்.


தொடர்ந்து கோபத்துடன் இருக்கும் ராதிகாவிடம் இப்ப என்ன ஆச்சுன்னு கேட்க, எனக்கு உங்கமேல பயங்கர கோபமா வருது. நீங்க பண்றது எதுவுமே பிடிக்கல. ஸ்கூலுக்கு வந்தா வந்த வேலையை மட்டும் பாருங்க என சொல்லிவிட்டு செல்கிறார். தன்னை புரிந்து கொள்ளாததை நினைத்து கோபி நொந்து கொள்கிறார். இதனையடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட போன நிலையில் அப்பா கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாருன்னு தைரியமா யார் கேட்டாலும் சொல்லு. எத்தனை நாளைக்கு தான் இப்படி பயப்படுவ என பாக்யா சொல்ல இனியா சரி சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.