Bhagyalakshmi serial : சமையல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாக்கியலட்சுமி.. நிஜ வாழ்க்கையை விவாதிக்கும் ரசிகர்கள்..

பாக்கியலட்சுமி தொடரில் நாயகி பாக்கியலட்சுமி தன்னுடைய சமையல் தொழிலுக்கு முடிவு கட்ட இருப்பது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிறையில் இருந்து கோபி வெளிவந்த பிறகு பாக்யாவின் சமையல் தொழிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

எழில் பாக்கியலட்சுமியிடம் இன்று எப்படி தொழில் சென்றது என்று கேட்டபோது, பாக்யா ”போச்சு” என்று சலிப்பாக கூறுகிறார். அப்போது, வீட்டிற்கு வரும் செல்வி அக்கா கொண்டுபோன மசாலாவை கூட யாரும் வாங்கல என்று விரக்தியுடன் கூறுகிறார். சாப்பாடும் யாரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்று கூறுகின்றனர். இதனால், பாக்கியலட்சுமி மிகவும் மனம் உடைந்து கண்கலங்குகிறார்.


அப்போது, தனது தாய்க்கு, மகன் எழில் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம் என்று ஆறுதல் கூறுகிறார். ஈஸ்வரியும் ஆறுதல் கூற அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்போது, செல்வி அக்கா நாளை நேராக ஆபிஸ் போய்விடவா? அல்லது வீட்டுக்கு வரவா? என்று கூறுகிறார். இதனால், கோபி மிகவும் கோபம் அடைகிறார். மேலும், தான் எவ்வளவு கூறியும் சமையல் ஆர்டர் எடுக்க போயிருக்க? என்று பாக்யாவிடம் சண்டையிடுகிறார்.  இனியாவும், செழியனும் கோபிக்கு ஆதரவாக பேசிவிட்டு சென்று விடுகின்றனர்.

மறுநாள் காலை பாக்யா கோபிக்கு, காபி கொண்டு சென்று கொடுக்கிறார். அப்போது, என்கிட்டதான் பேசாதனு சொன்னேன்ல என மீண்டும் கோபி பாக்கியலட்சுமியிடம் கோபமாக கத்துகிறார். இதனால், மிகவும் மனமுடையும் பாக்கியலட்சுமி தன்னுடைய சமையல் தொழிலை நிறுத்திக்கொள்ள முடிவு செய்கிறார். மேலும், தான் சமைக்கும் இடத்தில் இருந்து பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு செல்வது போல எபிசோட் நிறைவடைகிறது.


பாக்கியலட்சுமி தன்னுடைய சமையல் தொழிலை நிறுத்த முடிவு செய்தது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ராதிகாவுடனான தொடர்பால் கோபி பாக்கியலட்சுமியின் மனம் நோகும்படி அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறார். மேலும், ராதிகாவுடன் கோபிக்கு உள்ள தொடர்பு வீட்டில் உள்ள பலருக்கும் மறைமுகமாக தெரிந்துள்ளது. ஆனால், பாக்கியாவிற்கு இதுவரை அதுபற்றி ஏதும் தெரியவில்லை. ஏற்கனவே கணவனால் மனம் நொந்துள்ள பாக்கியா தற்போது தன்னுடைய சமையல் தொழிலும் முடிவுக்கு வருவதை எண்ணி கலங்குவதை ரசிகர்கள் மிகுந்த மன வேதனையுடன் பார்த்து வருகின்றனர். நிஜ வாழ்க்கையிலும் இதுபோல நடக்கும் சம்பவங்களை பற்றி தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள்.

மேலும் படிக்க : Urfi Javed Watch Video: கிட்டத்தட்ட நிர்வாணம்.. பூ மட்டும்தான் ஆடை.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய உர்ஃபி ஜாவேத்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola